திருப்பூர் ரயில் நிலையத்தில் பயணியிடம் 10 சவரன் நகை வழிப்பறி செய்த நபர் கைது

நகை பறிப்பில் ஈடுபட்ட திருப்பூர் பாவனி நகரை சேர்ந்த பிரகாஷ் என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 10 சவரன் நகையை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.


திருப்பூர்: நாகர்கோவில் மாவட்டத்தை சேர்ந்தவர் நாகம்மாள் வயது 59. இவர் தனது குடும்பத்தார் 13 பேருடன், திருப்பதி செல்வதற்காக ( பிலாஸ்பூரிலிருந்து திருநெல்வேலி செல்லும்) எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று முன்தினம் சென்றுள்ளார். ரயிலானது திருப்பூர் ரயில் நிலையம் வந்தடைந்தது.

இதனிடையே ஜன்னல் ஓரமாக நாகம்மாள் அமர்ந்து, உறவினர்களுடன் பேசிகொண்டிருந்த போது இந்தசந்தர்ப்பத்தை பயண்படுத்தி, ரயில்வே நடைமேடையில் நின்றிருந்த மர்ம நபர் ஒருவர், நாகம்மாள் அணிந்திருந்த 10 சவரன் தங்க நகையை பறித்து கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் தப்பி சென்றார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட நாகம்மாள் திருப்பூர் ரயில்வே இருப்புபாதை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிறுத்தம் பகுதிகளில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை கண்டறிந்தனர்.



தொடர்ந்து அந்த நபர் திருப்பூர் கொடிகம்பம் பவானி நகர் பகுதியில் இருப்பதை அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்க்கு சென்று நகை பறிப்பில் ஈடுபட்ட திருப்பூர் பாவனி நகரை சேர்ந்த பிரகாஷ் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 10 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.



தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...