திருப்பூர் ரயில் நிலையத்தில் பயணியிடம் 10 சவரன் நகை வழிப்பறி செய்த நபர் கைது

நகை பறிப்பில் ஈடுபட்ட திருப்பூர் பாவனி நகரை சேர்ந்த பிரகாஷ் என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 10 சவரன் நகையை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.


திருப்பூர்: நாகர்கோவில் மாவட்டத்தை சேர்ந்தவர் நாகம்மாள் வயது 59. இவர் தனது குடும்பத்தார் 13 பேருடன், திருப்பதி செல்வதற்காக ( பிலாஸ்பூரிலிருந்து திருநெல்வேலி செல்லும்) எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று முன்தினம் சென்றுள்ளார். ரயிலானது திருப்பூர் ரயில் நிலையம் வந்தடைந்தது.

இதனிடையே ஜன்னல் ஓரமாக நாகம்மாள் அமர்ந்து, உறவினர்களுடன் பேசிகொண்டிருந்த போது இந்தசந்தர்ப்பத்தை பயண்படுத்தி, ரயில்வே நடைமேடையில் நின்றிருந்த மர்ம நபர் ஒருவர், நாகம்மாள் அணிந்திருந்த 10 சவரன் தங்க நகையை பறித்து கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் தப்பி சென்றார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட நாகம்மாள் திருப்பூர் ரயில்வே இருப்புபாதை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிறுத்தம் பகுதிகளில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை கண்டறிந்தனர்.



தொடர்ந்து அந்த நபர் திருப்பூர் கொடிகம்பம் பவானி நகர் பகுதியில் இருப்பதை அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்க்கு சென்று நகை பறிப்பில் ஈடுபட்ட திருப்பூர் பாவனி நகரை சேர்ந்த பிரகாஷ் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 10 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.



தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...

துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி

Coimbatore மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்ற...

சின்ன தடாகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: நீர்நிலைகளை தூர்வார கோரிக்கை

கோவை சின்ன தடாகம் பேருந்து நிலையம் அருகே கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. பல...