திருப்பூர் ரயில் நிலையத்தில் பயணியிடம் 10 சவரன் நகை வழிப்பறி செய்த நபர் கைது

நகை பறிப்பில் ஈடுபட்ட திருப்பூர் பாவனி நகரை சேர்ந்த பிரகாஷ் என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 10 சவரன் நகையை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.


திருப்பூர்: நாகர்கோவில் மாவட்டத்தை சேர்ந்தவர் நாகம்மாள் வயது 59. இவர் தனது குடும்பத்தார் 13 பேருடன், திருப்பதி செல்வதற்காக ( பிலாஸ்பூரிலிருந்து திருநெல்வேலி செல்லும்) எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று முன்தினம் சென்றுள்ளார். ரயிலானது திருப்பூர் ரயில் நிலையம் வந்தடைந்தது.

இதனிடையே ஜன்னல் ஓரமாக நாகம்மாள் அமர்ந்து, உறவினர்களுடன் பேசிகொண்டிருந்த போது இந்தசந்தர்ப்பத்தை பயண்படுத்தி, ரயில்வே நடைமேடையில் நின்றிருந்த மர்ம நபர் ஒருவர், நாகம்மாள் அணிந்திருந்த 10 சவரன் தங்க நகையை பறித்து கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் தப்பி சென்றார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட நாகம்மாள் திருப்பூர் ரயில்வே இருப்புபாதை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிறுத்தம் பகுதிகளில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை கண்டறிந்தனர்.



தொடர்ந்து அந்த நபர் திருப்பூர் கொடிகம்பம் பவானி நகர் பகுதியில் இருப்பதை அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்க்கு சென்று நகை பறிப்பில் ஈடுபட்ட திருப்பூர் பாவனி நகரை சேர்ந்த பிரகாஷ் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 10 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.



தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...