சுப்பிரமணியம்பாளையத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் - ஏராளமானோர் பங்கேற்பு

தமிழ்நாடு மின்சார வாரியம், வருவாய் மற்றும் பேரிடம் மேலாண்மைத்துறை, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டனர்.


கோவை: கோவை மாநகராட்சி 15வது வார்டுக்கு உட்பட்ட சுப்பிரமணியம்பாளையத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதிகளில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.



தமிழ்நாடு முதல்வர் அவர்களால் கோவையில் துவக்கி வைக்கப்பட்டு தமிழகமெங்கும் சிறப்பாக செயல்பாட்டுவரும் ”மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி 15வது வார்டுக்குட்பட்ட சுப்பிரமணியம்பாளைத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது.



இதற்கு 15வது வார்டு மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி பச்சைமுத்து தலைமை தாங்கி மனுக்களை பொதுமக்களிடம் பெற்றுக்கொண்டார். இந்த முகாமில் தமிழ்நாடு மின்சார வாரியம், வருவாய் மற்றும் பேரிடம் மேலாண்மைத்துறை, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, வாழ்வாதார கடன் உதவிகள் துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டனர்.



இந்த முகாமில் சுமார் 200க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர். இந்த முகாமில் சிறப்பாளர்களாக வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், உதவி ஆணையாளர் ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளர் இளங்கோ, மின் வாரிய உதவி செயற்பொறியாளர் பாலாஜி, உதவி பொறியாளர் உத்தமன், காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், துறை அதிகாரிகள் ஜெயகுமார், நித்யா, அமுதவள்ளி, அஸ்வீன்ராஜ், கிருபா, பிரேமா, தீனதயாளன், ராம்சாமி, ஸ்ரீதேவி, காங்கிரஸ் மாவட்ட செயலாளர் சேக் அப்துல் காதர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சின்னுராமகிருஷ்ணன், செந்தில்குமார், திமுக வட்ட செயலாளர் ஈஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Newsletter

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...

Coimbatore Police Fine Youths ₹19,500 for Bike Stunt Near Saravanampatti

Coimbatore City Police imposed a fine of ₹19,500 on four youths after a video showing them performing dangerous stunts a...

கோவையில் இருசக்கர வாகனத்தில் சாகசம்; இளைஞர்களுக்கு ₹19,500 அபராதம் விதித்த போலீசார்

சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்களுக்கு கோவை மாநகர காவல் து...

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...