உடுமலை அருகே அரசு பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனர் மீது தாக்குதல் - போதை வாலிபர்களுக்கு தர்ம அடி

இலவச டிக்கெட் கேட்டு புங்கமுத்தூர் பிரிவில் பேருந்தை வழிமறித்து செங்கல் மற்றும் கல்லை கொண்டு ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது போதையில் இருந்த வாலிபர்கள் தாக்கியுள்ளனர். இதனைப்பார்த்த பேருந்தில் இருந்த பொதுமக்கள் குடிபோதையில் ரகளை செய்த வாலிபர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பருத்தியூர் செல்லும் 33 எண் வழித்தட பேருந்தை பிராபரகர் என்பவர் ஓட்டி சென்றார். நடத்துனராக குமார் இருந்த நிலையில் பருத்தியூர் சென்று விட்டு உடுமலைக்கு வரும் போது தேவனூர் புதூரில் மூன்று வாலிபர்கள் குடிபோதையில் பேருந்தில் ஏறியதாக கூறப்படுகின்றது.

அப்போது குடிபோதையில் இருந்த வாலிபர்கள் இலவசமாக தங்களை உடுமலைக்கு அழைத்துச் செல்லுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் நடத்துனர் டிக்கெட் எடுக்குமாறு கூறியுள்ளார். பின்னர் பொதுமக்கள் உதவி உடன் நடத்துனர் சின்னபுதூர் பேருந்து நிறுத்தும் பகுதியில் கீழே இறக்கி விட்டதாக கூறப்படுகின்றது.



இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் பேருந்து பின் தொடர்ந்து புங்கமுத்தூர் பிரிவில் பேருந்தை வழிமறித்து செங்கல் மற்றும் கல்லை கொண்டு ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது சாரமாரியதாக தாக்கியதாக தெரிகிறது.



பின்னர் பேருந்தில் இருந்த பொதுமக்கள் குடிபோதையில் ரகளை செய்த வாலிபர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர்.



பின்னர் காயம் அடைந்த அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோர் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தளி போலீசார் வழக்கு பதிவு செய்து குடிபோதையில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தாக்கிய திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் மற்றும் அங்கலக்குறிச்சியை சேர்ந்த பிரசாந்த் என்ற வாலிபரை கைது செய்தனர்.

தப்பி ஓடிய ரஞ்சித் என்பவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர் உடுமலை அருகே அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை மூன்று வாலிபர்கள் குடிபோதையில் தாக்கிய சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...