உடுமலை அருகே அரசு பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனர் மீது தாக்குதல் - போதை வாலிபர்களுக்கு தர்ம அடி

இலவச டிக்கெட் கேட்டு புங்கமுத்தூர் பிரிவில் பேருந்தை வழிமறித்து செங்கல் மற்றும் கல்லை கொண்டு ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது போதையில் இருந்த வாலிபர்கள் தாக்கியுள்ளனர். இதனைப்பார்த்த பேருந்தில் இருந்த பொதுமக்கள் குடிபோதையில் ரகளை செய்த வாலிபர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பருத்தியூர் செல்லும் 33 எண் வழித்தட பேருந்தை பிராபரகர் என்பவர் ஓட்டி சென்றார். நடத்துனராக குமார் இருந்த நிலையில் பருத்தியூர் சென்று விட்டு உடுமலைக்கு வரும் போது தேவனூர் புதூரில் மூன்று வாலிபர்கள் குடிபோதையில் பேருந்தில் ஏறியதாக கூறப்படுகின்றது.

அப்போது குடிபோதையில் இருந்த வாலிபர்கள் இலவசமாக தங்களை உடுமலைக்கு அழைத்துச் செல்லுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் நடத்துனர் டிக்கெட் எடுக்குமாறு கூறியுள்ளார். பின்னர் பொதுமக்கள் உதவி உடன் நடத்துனர் சின்னபுதூர் பேருந்து நிறுத்தும் பகுதியில் கீழே இறக்கி விட்டதாக கூறப்படுகின்றது.



இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் பேருந்து பின் தொடர்ந்து புங்கமுத்தூர் பிரிவில் பேருந்தை வழிமறித்து செங்கல் மற்றும் கல்லை கொண்டு ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது சாரமாரியதாக தாக்கியதாக தெரிகிறது.



பின்னர் பேருந்தில் இருந்த பொதுமக்கள் குடிபோதையில் ரகளை செய்த வாலிபர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர்.



பின்னர் காயம் அடைந்த அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோர் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தளி போலீசார் வழக்கு பதிவு செய்து குடிபோதையில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தாக்கிய திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் மற்றும் அங்கலக்குறிச்சியை சேர்ந்த பிரசாந்த் என்ற வாலிபரை கைது செய்தனர்.

தப்பி ஓடிய ரஞ்சித் என்பவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர் உடுமலை அருகே அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை மூன்று வாலிபர்கள் குடிபோதையில் தாக்கிய சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

Tragedy in Tiruppur: Conductor Sleeping in Front of Bus Run Over, Killed

A 23-year-old bus conductor was killed in a tragic accident in Tiruppur after a private bus driver allegedly failed to n...

திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...