உடுமலையில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாள் கொண்டாட்டம்

உடுமலை நகராட்சி 4-வது வார்டில் முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி பிறந்தநாள் விழா தெற்கு மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி 4-வது வார்டில் முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி பிறந்தநாளை உடுமலை நகர இளைஞர் காங்கிரஸ் சார்பாக கொண்டாடப்பட்டது.

தெற்கு மாவட்ட செயலாளர் முருகன் தலைமை வகித்தார். 4-வது வார்டு தலைவர் ரவி முன்னிலை வகித்தார்.



உடுமலை நகர பொதுச்செயலாளர் செல்வராஜ் இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நகர இளைஞர் காங்கிரஸ் செயலாளர் சதீஷ்குமார், துணைச் செயலாளர் திருச்சி முத்து செய்திருந்தனர்.

நிகழ்ச்சியில் நான்காவது வார்டு நகர மன்ற உறுப்பினர் கலைவாணி மகளிர் அணியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் தொடர் நீர்வரவால் நீர்மட்டம் 57.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 202 கன அட...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....