சங்க அலுவலகத்தை பூட்டிய முன்னாள் நிர்வாகி - உள்ளிருப்பு போராட்டம் நடத்திய புதிய நிர்வாகிகள்

கோவையில் மிக பழமையான புகழ்பெற்ற ராஜஸ்தான் சங்கத்திற்கு முன்னாள் நிர்வாகிகள்  அவபெயரை ஏற்படுத்தி வருகின்றனர் எனவும், நீதிமன்ற உத்தரவை மதிப்பதில்லை என புதிய நிர்வாகிகள் தெரிவித்தனர்.


கோவை: ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ராஜஸ்தானி சங்கத்தின் அலுவலகத்தை பூட்டிச் சென்ற முன்னாள் நிர்வாகிகளை கண்டித்து புதிய நிர்வாகிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ராஜஸ்தானி சங்கத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராஜஸ்தான் மக்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படும் நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக சங்க தேர்தல் நடைபெறாததால் முன்னாள் தலைவர் மதன் லால் பாப்னா தொடர்ந்து தலைவராக இருந்தார்.

இதனிடையே ராஜஸ்தானி சங்கத்தின் உறுப்பினர்கள் சுமார் 450 பேரை எந்த காரணமும் இல்லாமல் முன்னாள் தலைவர் மதன்லால் பாப்னா நீக்கியுள்ளார். இதையடுத்து உறுப்பினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததில் உறுப்பினர்கள் நீக்கம் செல்லாது என நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து கடந்த 5 ம் தேதி நடைபெற்ற அச்சங்க தேர்தலில் புதிய தலைவராக சர்வான் பொஹரா உட்பட 26 நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் புதிய நிர்வாகிகளிடம் பொறுப்புகளை ஒப்படைக்காமல் பழைய நிர்வாகத்தினர் பிரச்சினையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.



இது குறித்து புதிய நிர்வாகிகள் புகாரின் பேரில் போலீஸார் பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் பழைய நிர்வாகிகள் வராமல் புறக்கணித்த நிலையில், தற்போது சங்க அலுவலகத்தையும் பூட்டிச் சென்றுள்ளனர்.



இதனால் இன்று அலுவலகத்திற்கு வந்த புதிய நிர்வாகிகள் உட்பட 50 க்கும் மேற்பட்டோர் ராஜஸ்தானி சங்க வளாகத்திலேயே முழக்கங்கள் எழுப்பிஉள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முன்னாள் தலைவர்உள்ளிட்ட நிர்வாகிகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து பேசிய அச்சங்கத்தின் புதியதலைவரான சர்வான் பொஹரா, உடனடியாக பழைய நிர்வாகத்தினர் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும் என்றும் கோவையில் மிக பழமையான புகழ்பெற்ற ராஜஸ்தான் சங்கத்திற்கு முன்னாள் நிர்வாகிகள் அவபெயரை ஏற்படுத்தி வருகின்றனர் எனவும் கூறினார். விரைவில் நிர்வாக பொறுப்பு மற்றும் அலுவலக சாவியை ஒப்படைக்கவில்லை என்றால் தொடர்ந்து சங்க வளாகத்திலேயே உண்ணாவிரதபோராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும்தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...