கள்ளக்கிணறு கொலை வழக்கு - குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய காவல்துறை

மது அருந்தியதை தட்டிகேட்டவர்களை கொலை செய்த வழக்கில் 800 பக்கம் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டன. கொலை குற்றவாளிகளை நவம்பர் 22 ஆம் தேதி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ள கிணறு கொலை வழக்கு தொடர்பான குற்றவாளிகளை நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்ப்படுத்தினர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் வசித்து வந்த செந்தில்குமார்,மோகன்ராஜ், ரத்தினம்மாள் மற்றும் புஷ்பவதி ஆகியோர் தனது வீட்டின் அருகே மது அருந்திய நபர்களை தட்டிக் கேட்டதற்காக வெட்டி கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் போலீசார் செல்லமுத்து, ஐயப்பன், குட்டி என்கின்ற வெங்கடேஷ், சோனை முத்தையா மற்றும் செல்வம் ஆகிய ஐந்து பேரை கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.



இதில் விசாரணையின் போது தப்பிக்க முயன்றதாக குட்டி என்கின்ற வெங்கடேஷ் என்பவனை போலீசார் கால் முட்டியில் சுட்டு பிடித்தனர்.

குட்டி என்கின்ற வெங்கடேஷ் கோவையில் அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்போடு சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த காவல்துறையினர் 800 பக்கத்திற்கு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இந்நிலையில் இன்று பல்லடம் குற்றவியல் நீதிமன்றத்தில் கலக்கிணறு கொலை குற்றவாளிகள் ஐந்து பேரையும் காவல்துறையினர் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தினர். குற்றவாளிகள் ஐந்து பேரையும் வரும் நவம்பர் 22 ஆம் தேதி திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என நீதிபதி சித்ரா உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...