மறைந்த சங்கரய்யாவுக்கு தாராபுரத்தில் இரங்கல் கூட்டம் - அமைச்சர் கயல்விழி பங்கேற்பு

சங்கரய்யாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தாராபுரம் அண்ணா சிலை முன்பு இரங்கல் கூட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சமரசமற்ற போராளி, நூற்றாண்டு கண்ட தமிழர் தோழர் சங்கரய்யாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தாராபுரம் அண்ணா சிலை முன்பு இரங்கல் கூட்டம் நடைபெற்றது.



கூட்டத்திற்கு ஆர்.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். இரங்கல் கூட்டத்தில் ஸ்ரீ ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு சங்கரய்யா குறித்து பேசினர்.

நிகழ்வில் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் எஸ்.வி. செந்தில் குமார், தாராபுரம் நகர மன்ற தலைவர் பாபு கண்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் மின்னல், காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் முருகானந்தம், திமுக நகர துணைச் செயலாளர் கமலக்கண்ணன், சிபிஎம் தாலுகா செயலாளர் கனகராஜ், திராவிட கழக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...