உடுமலை அருகே அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா - ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்பு

உடுமலை கிழக்கு அரிமா சங்கத்தின் சார்பில் அனைத்து குழந்தைகளுக்கும் நோட்புக், பென்சில், பேனா உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவிகளின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

உடுமலை அடுத்த சித்தக் குட்டை இந்திரா நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. உடுமலை கிழக்கு அரிமா சங்கம் மற்றும் தனியார் அமைப்பும் இணைந்து விழாவை நடத்தியது. நிகழ்வுக்கு தலைமை ஆசிரியை உமா மகேஸ்வரி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.



வட்டார கல்வி அலுவலர் ஆறுமுகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்வை துவக்கி வைத்தார். பின்னர் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



உடுமலை கிழக்கு அரிமா சங்கத்தின் சார்பில் அனைத்து குழந்தைகளுக்கும் நோட்புக், பென்சில், பேனா உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் உடுமலை கிழக்கு அரிமா சங்கத் தலைவர் வக்கீல் ராஜாராம், செயலாளர்கள் விஜயமோகன், ராஜா சந்திரசேகர், பொருளாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள், தனியார் அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...