உடுமலை அருகே அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா - ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்பு

உடுமலை கிழக்கு அரிமா சங்கத்தின் சார்பில் அனைத்து குழந்தைகளுக்கும் நோட்புக், பென்சில், பேனா உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவிகளின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

உடுமலை அடுத்த சித்தக் குட்டை இந்திரா நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. உடுமலை கிழக்கு அரிமா சங்கம் மற்றும் தனியார் அமைப்பும் இணைந்து விழாவை நடத்தியது. நிகழ்வுக்கு தலைமை ஆசிரியை உமா மகேஸ்வரி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.



வட்டார கல்வி அலுவலர் ஆறுமுகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்வை துவக்கி வைத்தார். பின்னர் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



உடுமலை கிழக்கு அரிமா சங்கத்தின் சார்பில் அனைத்து குழந்தைகளுக்கும் நோட்புக், பென்சில், பேனா உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் உடுமலை கிழக்கு அரிமா சங்கத் தலைவர் வக்கீல் ராஜாராம், செயலாளர்கள் விஜயமோகன், ராஜா சந்திரசேகர், பொருளாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள், தனியார் அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...