பல்லடம் அருகே diaper தயாரிக்கும் நிறுவனத்திற்கு எதிர்ப்பு - பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

அக்டோபர் இரண்டாம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்திலும் diaper தயாரிக்கும் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என பொதுமக்கள் சார்பில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே diaper தயாரிக்கும் நிறுவனத்திற்கு அனுமதி வழங்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் உண்ணாவிரதம் மற்றும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வே வாவிபாளையம் கிராமத்தில் வேலாத்தாள் நிறுவனம் என்ற பெயரில் டயப்பர் தயாரிக்கும் நிறுவனம் புதிதாக அமைய உள்ளது. இந்நிறுவனத்தின் உரிமையாளர் ஊராட்சி நிர்வாகத்தில் கட்டிட அனுமதி பெறாமலேயே கட்டுமான பணிகளை செய்து வருவதாகவும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையிலும் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை உருவாக்கும் வகையிலும் இந்த நிறுவனம் அமைக்க அரசு அனுமதி வழங்கக் கூடாது என அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.



இந்த நிறுவனத்தில் உபயோகப்படுத்தும் மூலப் பொருட்கள் மற்றும் அதன் கழிவுகள் நீர்வழிப் பாதையை அடைக்கும் வாய்ப்பு உள்ளதாகவும்,விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகும் எனக் கூறி வாவிபாளையம், குள்ளம்பாளையம், கம்மாளப்பட்டி, கேத்தனூர், வரப்பாளையம், மந்திரிப்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள், திமுக, அதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம்,மதிமுக என அனைத்து கட்சி நிர்வாகிகளும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உண்ணாவிரத மேற்கொண்டு வருகின்றனர்.



மேலும் உடுமலை பல்லடம் சாலையில் வாலிபாளையம் பகுதியில் உள்ள அனைத்து கடைகளையும் அடைத்து கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்திலும் டயப்பர் தயாரிக்கும் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என பொதுமக்கள் சார்பில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...