பல்லடம் அருகே diaper தயாரிக்கும் நிறுவனத்திற்கு எதிர்ப்பு - பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

அக்டோபர் இரண்டாம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்திலும் diaper தயாரிக்கும் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என பொதுமக்கள் சார்பில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே diaper தயாரிக்கும் நிறுவனத்திற்கு அனுமதி வழங்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் உண்ணாவிரதம் மற்றும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வே வாவிபாளையம் கிராமத்தில் வேலாத்தாள் நிறுவனம் என்ற பெயரில் டயப்பர் தயாரிக்கும் நிறுவனம் புதிதாக அமைய உள்ளது. இந்நிறுவனத்தின் உரிமையாளர் ஊராட்சி நிர்வாகத்தில் கட்டிட அனுமதி பெறாமலேயே கட்டுமான பணிகளை செய்து வருவதாகவும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையிலும் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை உருவாக்கும் வகையிலும் இந்த நிறுவனம் அமைக்க அரசு அனுமதி வழங்கக் கூடாது என அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.



இந்த நிறுவனத்தில் உபயோகப்படுத்தும் மூலப் பொருட்கள் மற்றும் அதன் கழிவுகள் நீர்வழிப் பாதையை அடைக்கும் வாய்ப்பு உள்ளதாகவும்,விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகும் எனக் கூறி வாவிபாளையம், குள்ளம்பாளையம், கம்மாளப்பட்டி, கேத்தனூர், வரப்பாளையம், மந்திரிப்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள், திமுக, அதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம்,மதிமுக என அனைத்து கட்சி நிர்வாகிகளும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உண்ணாவிரத மேற்கொண்டு வருகின்றனர்.



மேலும் உடுமலை பல்லடம் சாலையில் வாலிபாளையம் பகுதியில் உள்ள அனைத்து கடைகளையும் அடைத்து கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்திலும் டயப்பர் தயாரிக்கும் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என பொதுமக்கள் சார்பில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...