கோவையில் விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும் - கலெக்டர் அதிரடி உத்தரவு

நீலாம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், அவிநாசி ரோட்டில், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில், மெகா சைஸ் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு இருந்தன. இத்தகவல், கலெக்டர் கிராந்திகுமார் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக, அவ்விளம்பர பலகைகளை அகற்ற சூலூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.


கோவை: கோவை - அவிநாசி ரோட்டில், நீலாம்பூரில் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில் இருந்த விளம்பர பலகைகள், நேற்று அகற்றப்பட்டன. வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிக்கும் வகையில், சாலை சந்திப்புகள், பிரதான சாலைகளுக்கு அருகில் விளம்பர பலகைகள் வைக்கக்கூடாது.

கோவையில் அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாத சமயங்களில், மெகா சைஸ் விளம்பர பலகைகள் வைக்கப்படுகின்றன. சில நாட்களுக்கு முன், கோவை நகர் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர பலகைகள், மாநகராட்சி நகரமைப்பு பிரிவினரால் அகற்றப்பட்டன.

நீலாம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், அவிநாசி ரோட்டில், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில், மெகா சைஸ் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு இருந்தன. இத்தகவல், கலெக்டர் கிராந்திகுமார் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக, அவ்விளம்பர பலகைகளை அகற்ற, சூலுார் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து, நீலாம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், சட்ட விரோதமாக, அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த அனைத்து விளம்பரபலகைகளும், நேற்று அகற்றப்பட்டன. இரும்பு சட்டங்கள் பறிமுதல் செய்யப்படும். சூலுார் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துராஜ் கூறுகையில், ''அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள், ஒவ்வொன்றாக அகற்றப்பட்டு வருகின்றன. அனைத்து விளம்பர பலகைகளும் அகற்றப்படும். இரும்பு சட்டங்களையும் வெட்டி எடுக்க, சம்பந்தப்பட்ட நிறுவனத்தினருக்கு அறிவுறுத்தியிருக்கிறோம். அவர்களே அகற்றாவிட்டால், ஊராட்சி சார்பில் அகற்றி, அதற்குரிய செலவு தொகை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் வசூலிக்கப்படும். அறுத்தெடுக்கப்படும் இரும்பு சட்டங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றார்.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...