வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க முடிவெடுங்கள் என கடலோர காவல்படை கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறை

வாழ்க்கையில்  மகிழ்ச்சியாக இருக்க முடிவெடுங்கள் என தனியார் கல்லூரியில் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற கடலோர காவல்படை கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.



கடலோர காவல்படை கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு எழுதிய “நம்மாலும் முடியும்” என்ற புத்தகம் விஜயா பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்டது.

இதன் நிகழ்ச்சி கோவை, ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள நிர்மலா மகளர் கல்லூரி தமிழ்துறை சார்பில் இன்று நடைபெற்றது.

இதில், கல்லூரி துணை முதல்வர் குழந்தை தெரஸ் தலைமை வகிக்க கல்லூரி தமிழ்துறைத் தலைவர் அருள்சீலி வரவேற்புரையாற்றினார். நூல் அறிமுக உரையை வள்ளியப்பன் பேசினார். இந்நிகழ்ச்சியில் விஜயா பதிப்பக உரிமையாளர் வேலாயுதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து மாணவிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சைலேந்திரபாபு பேசுகையில், இந்த புத்தகம் எழுத தூண்டுகோலாக ஜப்பான் நாட்டின் புஷிமா கலாச்சாரம் மற்றும் ஜப்பானிய மக்களின் தொழில்நுட்பம் மற்றும் வாழ்வாதார முறை தன்னை வெகுவாக கவர்ந்தது என கூறினார்.

ஜப்பானிய மக்கள் வாழ காரணம் இருந்தால் வாழலாம் அல்லது செத்துமடி என்ற கொள்கை உடையவர்கள் என தெரிவித்தவர். அந்நாட்டில் சமுதாய அக்கறையும் லஞ்சம் மற்றும் ஊழலற்ற ஆட்சி, கடின உழைப்பு ஆகிய காரணத்தாலேயே சிறந்த நாடாக விளங்குவதாக தெரிவித்தார்.

மேலும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு தனி திறமை உள்ளதாகவும், பயம் இருந்தாலும் செயலை செயல்படுத்துவது தான் தைரியம் என்றவர், வாழ்கையில் தடைகள் மற்றும் இடையூறுகளை தாண்டி மாணவர்கள் வெற்றி பெற முயற்சி செய்ய வேண்டும் என்றார்.

பின்னர் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த சைலேந்திரபாபு, மாணவிகளுக்கு தான் எழுதிய “நம்மாலும் முடியும்” புத்தகத்தை பரிசாக வழங்கினார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...