வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க முடிவெடுங்கள் என கடலோர காவல்படை கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறை

வாழ்க்கையில்  மகிழ்ச்சியாக இருக்க முடிவெடுங்கள் என தனியார் கல்லூரியில் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற கடலோர காவல்படை கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.



கடலோர காவல்படை கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு எழுதிய “நம்மாலும் முடியும்” என்ற புத்தகம் விஜயா பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்டது.

இதன் நிகழ்ச்சி கோவை, ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள நிர்மலா மகளர் கல்லூரி தமிழ்துறை சார்பில் இன்று நடைபெற்றது.

இதில், கல்லூரி துணை முதல்வர் குழந்தை தெரஸ் தலைமை வகிக்க கல்லூரி தமிழ்துறைத் தலைவர் அருள்சீலி வரவேற்புரையாற்றினார். நூல் அறிமுக உரையை வள்ளியப்பன் பேசினார். இந்நிகழ்ச்சியில் விஜயா பதிப்பக உரிமையாளர் வேலாயுதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து மாணவிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சைலேந்திரபாபு பேசுகையில், இந்த புத்தகம் எழுத தூண்டுகோலாக ஜப்பான் நாட்டின் புஷிமா கலாச்சாரம் மற்றும் ஜப்பானிய மக்களின் தொழில்நுட்பம் மற்றும் வாழ்வாதார முறை தன்னை வெகுவாக கவர்ந்தது என கூறினார்.

ஜப்பானிய மக்கள் வாழ காரணம் இருந்தால் வாழலாம் அல்லது செத்துமடி என்ற கொள்கை உடையவர்கள் என தெரிவித்தவர். அந்நாட்டில் சமுதாய அக்கறையும் லஞ்சம் மற்றும் ஊழலற்ற ஆட்சி, கடின உழைப்பு ஆகிய காரணத்தாலேயே சிறந்த நாடாக விளங்குவதாக தெரிவித்தார்.

மேலும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு தனி திறமை உள்ளதாகவும், பயம் இருந்தாலும் செயலை செயல்படுத்துவது தான் தைரியம் என்றவர், வாழ்கையில் தடைகள் மற்றும் இடையூறுகளை தாண்டி மாணவர்கள் வெற்றி பெற முயற்சி செய்ய வேண்டும் என்றார்.

பின்னர் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த சைலேந்திரபாபு, மாணவிகளுக்கு தான் எழுதிய “நம்மாலும் முடியும்” புத்தகத்தை பரிசாக வழங்கினார்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...