தேசிய குழந்தைகள் தினம் - கோவையில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் தொந்தரவிற்கு கிடைக்க பெறும் தண்டனைகள் குறித்தான பதாகைகளை ஏந்தி பேரணி கோவையில் நடைபெற்றது. இறுதியாக உறுதிமொழியும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.


கோவை: தேசிய குழந்தைகள் தினத்தையொட்டி கோவையில் நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியார் தொடங்கி வைத்தார்.

ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் இந்தியா முழுவதும் தேசிய குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் குழந்தைகளுக்கான பல்வேறு கலை நிகழ்ச்சிகள், போட்டிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறும்.



அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு துறை, மாநில குழந்தைகள் பாதுக்காப்பு சங்கம் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



இந்தப் பேரணியை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திக்குமார் துவக்கி வைத்தார்.



இந்தப் பேரணியில், சமூக பாதுகாப்பு துறையினர் மற்றும் தேசிய குழந்தைகள் சங்கத்தினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் தொந்தரவிற்கு கிடைக்க பெறும் தண்டனைகள் குறித்தான பதாகைகளை ஏந்தி பேரணி மேற்கொண்டனர்.



இந்த பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கி ரேஸ்கோர்ஸ்யில் நிறைவடைகிறது. பேரணிக்கு முன்னதாக குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.



மேலும் இந்நிகழ்வில் நிமிர்வு கலைக்குழுவினரின் பறை இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...