உடுமலையில் அதிகாலை முதல் கனமழை - உழவர் சந்தையில் தேங்கிய மழைநீர்

உடுமலையில் உள்ள உழவர் சந்தை முன்பு மழைநீர் தேங்காதவாறு வடிகால்கள் அமைக்க நகராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் உழவர் சந்தை பகுதியில் மழைநீர் தேங்கி குளம் போல காட்சியளிக்கிறது.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கடந்த சில தினங்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருது நிலையில் நேற்று அதிகாலை முதல் கன மழை பெய்த காரணத்தால் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.



இந்த நிலையில் ரயில் நிலையம் அருகில் உள்ள உழவர் சந்தை முன்பு அதிக அளவு மழை நீர் தேங்கியால் காலை வழக்கம் போல் உழவர் சந்தை பகுதிக்கு வந்த விவசாயிகளும் பொதுமக்களும் கடும் அவதி அடைந்தனர்.



எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகத்தினர் உழவர் சந்தை முன்பு மழை நீர் தேங்காதவாறு மழைநீர் வடிகால்கள் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...