உடுமலையில் அதிகாலை முதல் கனமழை - உழவர் சந்தையில் தேங்கிய மழைநீர்

உடுமலையில் உள்ள உழவர் சந்தை முன்பு மழைநீர் தேங்காதவாறு வடிகால்கள் அமைக்க நகராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் உழவர் சந்தை பகுதியில் மழைநீர் தேங்கி குளம் போல காட்சியளிக்கிறது.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கடந்த சில தினங்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருது நிலையில் நேற்று அதிகாலை முதல் கன மழை பெய்த காரணத்தால் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.



இந்த நிலையில் ரயில் நிலையம் அருகில் உள்ள உழவர் சந்தை முன்பு அதிக அளவு மழை நீர் தேங்கியால் காலை வழக்கம் போல் உழவர் சந்தை பகுதிக்கு வந்த விவசாயிகளும் பொதுமக்களும் கடும் அவதி அடைந்தனர்.



எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகத்தினர் உழவர் சந்தை முன்பு மழை நீர் தேங்காதவாறு மழைநீர் வடிகால்கள் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...