கோவையில் நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்பட இருந்த அரச மரத்திற்கு மறுவாழ்வு

வேலாண்டிபாளையத்தை சேர்ந்த செயல் செயற்பாட்டு களம் அமைப்பினர் நெடுஞ்சாலைத்துறையிடம் அனுமதி பெற்று இன்று காலை 10 மணி அளவில் மரம் வெட்டும் பணியாளர்களைக் கொண்டு அரச மரத்தின் கிளைகளை  நறுக்கி இரண்டு கிரேன், ஒரு ஜேசிபி மூலம் மரத்தை பிடிங்கி எடுத்துச்சென்று மயானத்திற்கு முன்பகுதியில் நடவு செய்தனர்.


கோவை: கோவை தடாகம் சாலை, கணுவாய் அருகே கே.என்.ஜி புதூர் பிரிவு, சத்யம் கிட்னி சென்டர் முன்புறமுள்ள ஒரு பெரிய 30 ஆண்டு பழமையான அரச மரம் ஒன்று சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்பட இருந்தது.



தகவல் அறிந்த கோவை வேலாண்டிபாளையத்தை சேர்ந்த செயல் செயற்பாட்டு களம் அமைப்பினர் நெடுஞ்சாலைத்துறையிடம் அனுமதிபெற்று இன்று காலை 10 மணி அளவில் மரம் வெட்டும் பணியாளர்களைக் கொண்டு அரச மரத்தின் கிளைகளை நறுக்கி இரண்டு கிரேன் ஒரு ஜேசிபி மூலம் 30 அடி நீளமுள்ள லாரி ஒன்றில் ஏற்றி தடாகம் சாலை வழியாக நான்கு கிலோ மீட்டர் பயணித்து வெங்கிட்டாபுரம் அவிலா கான்வென்ட் முன்புறமுள்ள அம்பேத்கர் சாலை வழியாக எடுத்துச் செல்லப்பட்டு வேலாண்டிபாளையம் மயானத்திற்கு முன்புறம் மாலை 4 மணி அளவில் மறு நடவு செய்யப்பட்டது.



செயல் சமூக செயற்பாட்டுக் களம் முன்னெடுத்த இந்த இயற்கைப் பணியில் வெங்கிட்டாபுரம் வேலாண்டிபாளையம் கோவில்மேடு பகுதியைச் சேர்ந்த செயல்பாட்டாளர்கள் தோழர்கள் பங்கேற்றார்கள். இதற்கான பணியை செயல் செயற்பாட்டு களத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆ.நந்தகுமார், இணை ஒருங்கிணைப்பாளர் சா.கதிரவன் ஆகியோர் செய்திருந்தனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...