கொங்கூர் கோவிலுக்கு தேர்வான அறங்காவலர்கள் மற்றும் உறுப்பினர்கள் அமைச்சர் சாமிநாதனிடம் வாழ்த்து

புக்கிர காளியம்மன் கோவிலுக்கு அறங்காவலர் குழு தலைவராக வேலுச்சாமியும், உறுப்பினர்களாக பாலசுப்பிரமணி, சுந்தரம், தமிழ்ச்செல்வி, சண்முகம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பசுபதீஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவராக பொன்னுச்சாமியும், உறுப்பினர்களாக ஈஸ்வரன், சசிகலா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கொங்குர் பகுதியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இரண்டு கோவில்கள் உள்ளன. இந்த கோவில்கள் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பசுபதீஸ்வரர் கோவில் மற்றும் உக்கிர காளியம்மன் ஆகிய இரண்டு கோவில்களுக்கு அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல், செயல் அலுவலர் சுந்தர் வடிவேல், ஆய்வாளர் முருகன் மற்றும் வெண்டுவ குல பங்காளிகள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

புக்கிர காளியம்மன் கோவிலுக்கு அறங்காவலர் குழு தலைவராக வேலுச்சாமியும், உறுப்பினர்களாக பாலசுப்பிரமணி, சுந்தரம், தமிழ்ச்செல்வி சண்முகம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பசுபதீஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவராக பொன்னுச்சாமியும், உறுப்பினர்களாக ஈஸ்வரன், சசிகலா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வான அனைவரும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டல தலைவரும் திமுக திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளருமான பத்மநாபன், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவரும் ஒன்றிய செயலாளருமான எஸ்வி செந்தில்குமார், மூலனூர் நகரச் செயலாளர் தண்டபாணி, தாராபுரம் தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் சிவசாமி மற்றும் பொன் ராஜா துறை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...