எடப்பாடி பழனிசாமி உறவினர்கள் பெயரில் மோசடி - கோவை ஐ.ஜி அலுவலகத்தில் புகார்

5 கோடி ரூபாய் நிலம் மோசடி செய்ததாக பலமுறை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் போலீசார் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்தனர்.


கோவை: திருச்செங்கோடு மற்றும் ராசிபுரம் பகுதிகளில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் எனக்கூறி 5 கோடி நிலம் மோசடி செய்ததாக கோவை ஐ.ஜி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருச்செங்கோடு ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து இன்று 20க்கும் மேற்பட்டோர் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஐஜி அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர்கள் எனக் கூறி 5 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடி செய்ததாக புகார் மனு அளித்தனர்.

அந்த புகாரில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

கடந்த 2012-ம் ஆண்டு குப்பிச்சிபாளையம் மரப்பரை கிராமத்தில் மோகனசுந்தரம் மற்றும் மணி ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனர்கள் சபாநாயகம், சந்திரகாந்த் மணிக்கவுண்டர் ஆகியோர் தில்லை நகர் என்ற பெயரில் வீட்டு மனை விற்பதாக விளம்பரம் செய்தனர். இதனை நம்பி சேலம் ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 86 க்கும் மேற்பட்டோர் பணம் முதலீடு செய்தோம். நிலம் வாங்கியவர்களில் சிலர் வீடு கட்ட முயன்ற போது வாங்கிய நிலங்கள் அனைத்தும் அனுமதிற்ற மனை பிரிவுகள் என்பது தெரியவந்தது. 2017ம் ஆண்டு அனுமதியற்ற மனை பிரிவுகளை ஒழுங்குபடுத்துவதற்காக அரசாங்கம் ஆணை பிறப்பித்தது.

இதனால் எங்களுடைய மனைகளை வரைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்தபோது இந்த நிலங்களுக்கு எந்த விதமான அரசு சார்ந்த நடவடிக்கையும் எடுக்காமல் மணி கவுண்டர் மருமகன் சந்திரகாந்த், சபாநாயகம், சங்கர் பத்மபிரியா, சிவா ஆகியோர் கூட்டு சேர்ந்து சுமார் ரூ. 5 கோடி மதிப்பிலான நிலத்தை போலியான வரைபடம் தயாரித்து நிலம் வாங்கி எங்களை ஏமாற்றி மோசடி செய்தது தெரிய வந்தது. மணி கவுண்டர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர் என்பதால் போலீசார் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காமல் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இது குறித்து பலமுறை நாங்கள் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் போலீசார் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...