எடப்பாடி பழனிசாமி உறவினர்கள் பெயரில் மோசடி - கோவை ஐ.ஜி அலுவலகத்தில் புகார்

5 கோடி ரூபாய் நிலம் மோசடி செய்ததாக பலமுறை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் போலீசார் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்தனர்.


கோவை: திருச்செங்கோடு மற்றும் ராசிபுரம் பகுதிகளில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் எனக்கூறி 5 கோடி நிலம் மோசடி செய்ததாக கோவை ஐ.ஜி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருச்செங்கோடு ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து இன்று 20க்கும் மேற்பட்டோர் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஐஜி அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர்கள் எனக் கூறி 5 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடி செய்ததாக புகார் மனு அளித்தனர்.

அந்த புகாரில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

கடந்த 2012-ம் ஆண்டு குப்பிச்சிபாளையம் மரப்பரை கிராமத்தில் மோகனசுந்தரம் மற்றும் மணி ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனர்கள் சபாநாயகம், சந்திரகாந்த் மணிக்கவுண்டர் ஆகியோர் தில்லை நகர் என்ற பெயரில் வீட்டு மனை விற்பதாக விளம்பரம் செய்தனர். இதனை நம்பி சேலம் ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 86 க்கும் மேற்பட்டோர் பணம் முதலீடு செய்தோம். நிலம் வாங்கியவர்களில் சிலர் வீடு கட்ட முயன்ற போது வாங்கிய நிலங்கள் அனைத்தும் அனுமதிற்ற மனை பிரிவுகள் என்பது தெரியவந்தது. 2017ம் ஆண்டு அனுமதியற்ற மனை பிரிவுகளை ஒழுங்குபடுத்துவதற்காக அரசாங்கம் ஆணை பிறப்பித்தது.

இதனால் எங்களுடைய மனைகளை வரைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்தபோது இந்த நிலங்களுக்கு எந்த விதமான அரசு சார்ந்த நடவடிக்கையும் எடுக்காமல் மணி கவுண்டர் மருமகன் சந்திரகாந்த், சபாநாயகம், சங்கர் பத்மபிரியா, சிவா ஆகியோர் கூட்டு சேர்ந்து சுமார் ரூ. 5 கோடி மதிப்பிலான நிலத்தை போலியான வரைபடம் தயாரித்து நிலம் வாங்கி எங்களை ஏமாற்றி மோசடி செய்தது தெரிய வந்தது. மணி கவுண்டர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர் என்பதால் போலீசார் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காமல் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இது குறித்து பலமுறை நாங்கள் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் போலீசார் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Newsletter

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...

கோவை பி.கே.புதூர் சிறுபாலத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின...

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...

Systemic Corruption Persists Unabated: Coimbatore Unit of Anti-Corruption Movement

The Coimbatore district unit of the Anti-Corruption Movement submitted a representation to Tamil Nadu Chief Minister C J...