இந்தியாவிலேயே முதல்முறையாக கதிர்நாயக்கன்பாளையத்தில் நவீன துப்பாக்கி சுடும் பயிற்சி

ஐந்து மாநில தேர்தலில் உள்ளூர் காவலர்களுடன் இணைந்து சி.ஆர்.பி.எப் வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும், இதற்காக தனியாக சி.ஆர்.பி.எப் வீரர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் சி.ஆர்.பி.எப் தலைவர் மற்றும் இயக்குனர் சுஜய் லால் தோசன் தெரிவித்துள்ளார்.


கோவை: இந்தியாவிலேயே முதல் முறையாக கோவை துடியலூர் அருகே கதிர்நாயக்கன்பாளையத்தில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி மையத்தில் குறைந்த செலவில் அமைக்கப்பட்டுள்ள நவீன துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தினை சி.ஆர்.பி.எப். தலைவர் மற்றும் இயக்குநர் சுஜய் லால் தோசென் திறந்து வைத்தார்.

கோவை துடியாலூரை அடுத்த கதிர்நாயக்கன்பாளையத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு இந்தியா முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் சி.ஆர்.பி.எப். காவலர் முதல் சப் இன்ஸ்பெக்டர் வரை வீரர்களுக்கு பயிற்ச்சி கொடுக்கப்படுகிறது.



இந்த நிலையில் தற்போது இந்த வளாகத்தில் இந்தியாவிலேயே முதல் முறையாக மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி மையத்தில் குறைந்த செலவில் நவீன துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தினை சி.ஆர்.பி.எப் கல்லூரி முதல்வர் அஜய் பரதன், சென்னை ரேஞ்ச் டி.ஐ.ஜி.அருள்குமார் ஆகியோர் மேற்பார்வையில் உருவாக்கியுள்ளனர்.



இதனை சி.ஆ.பி.எப் தலைவர் மற்றும் இயக்குனர் சுஜய் லால் தோசன் துவக்கி வைத்தார்.



அப்போது ஆண் மற்றும் பெண் வீரர்கள் குறி பார்த்து துப்பக்கியால் சுட்டு சாகசம் செய்தனர்.



தொடர்ந்து துப்பாக்கு சுடும் தளத்தை பார்வையிட்டு வீரர்களுக்கு இயக்குநர் வாழ்த்து தெரிவித்தார்.



தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சி.ஆர்.பி.ஆப். இயக்குநர் சுஜய் லால் தோசன் இந்தியாவில் உள்ள பயிற்சி கல்லூரிகளில் நவீன கட்டமைப்பு இங்கு தான் உருவாக்கப்பட்டுள்ளது. எந்த இடத்திற்கும் எடுத்து சென்று அமைக்கும் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பல்துறை அம்சங்களைக் கொண்ட இந்த துப்பாக்கிச் சுடும் தளம் இப்போது இருக்கும் பயிற்சியாளர்களின் திறமையான துப்பாக்கிச் சுடும் நடைமுறைகளுக்கும். அதன் பணியாளர்களின் துப்பாக்கி சுடும் திறன்களை கூர்மைப்படுத்துவதற்கும் பயன்படும் என்றார்.

மேலும் நடைபெறும் ஐந்து மாநில தேர்தலில் உள்ளூர் காவலர்களுடன் இணைந்து எங்கள் சி.ஆர்.பி.எப். வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இதற்காக தனியாக சி.ஆர்.பி.எப். வீரர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் பகுதியில் தற்ப்போது தீவிரவாதம் கட்டுபடுத்தப்பட்டுள்ளது. ட்ரோன் கேமரா மூலம் தீவிரவாதிகளின் முகாமை கண்காணித்து அழிக்கப்டுகிறது என்று கூறினார். இவ்விழாவில் CRPF மற்றும் மாநில காவல்துறை / மாவட்ட நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...