குடியிருப்பு பகுதிகளில் குப்பைகளை அகற்ற வேண்டும் - கோவை ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

நீண்ட்நாட்கள் குப்பை மற்றும் கழிவு பொருட்கள் தீ வைத்து எரிக்கப்படுவதால் மாசு ஏற்பட்டு பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.


கோவை: குப்பைகளை அகற்றக் கோரியும் தீ வைப்பதை தடுக்க கோரியும் நீலிகோணாம்பாளையம் பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்

கோவை நீலிகோணம்பாளையம் தச்சன் தோட்டம் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது.



இந்நிலையில் தச்சன் தோட்டம் வடக்கு விநாயகர் நகர் பகுதியில் ரயில்வே வழித்தடம் ஓரத்தில் அதிகமாக கழிவுகள் குப்பைகள் தனியார் கம்பெனிகளாலும் பழைய பொருள் வியாபாரம் செய்பவர்களாலும் கொட்டப்படுவதாகவும் பலமுறை அந்தக் கழிவு பொருட்கள் தீ வைத்து எரிக்கப்படுவதால் மாசு ஏற்பட்டு பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வருவதாகவும் இதனை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மேலும் இந்தப் பகுதியில் தெரு விளக்குகள் இல்லாததால் சமூக விரோத செயல்களும் நடைபெறுவதாக மனுவில் குறிப்பிட்டுள்ள அப்பகுதி மக்கள், குப்பைகள் கொட்டப்படுவதையும் தீ வைத்து மாசு ஏற்படுத்தப்படுவதை தடுப்பதற்கும் சமூக விரோத செயல்களை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் இந்த கோரிக்கை மனுவை முதலமைச்சர் தனிப்பிரிவிற்கும் அனுப்ப உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆணையர் கட்டா ரவி தேஜா IAS நேரில் ஆய்வு செய்தார். காலை உணவு திட்ட சம...

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆணையர் கட்டா ரவி தேஜா IAS நேரில் ஆய்வு செய்தார். காலை உணவு திட்ட சம...

கோவை கணேசபுரம் பள்ளி கட்டுமானத்தை மேயர் நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் கணேசபுரம் பகுதியில் ரூ.95 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாநகராட்சி நடுநிலைப் பள...

கோவை பீளமேடு பகுதியில் மழைநீர் வடிகால், சாக்கடை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் ரூ.10 லட்சம் மழைநீர் வடிகால் பணி, சாக்கடை அடைப்பு சரிசெய்தல், குப்பை சேகரிப்பு, மரக்குப...

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான வங்கிக் கடன் சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.15,000 வங்கிக் கடன் வழங்க ஆகஸ்ட் 24 முதல் 29 வரை பிரதான அலுவலகம் மற்றும்...

ஓணம் பண்டிகை: பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஓணம் பண்டிகையையொட்டி பயணிகளின் அதிகரித்த தேவையை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பெங்களூரு SMVT மற்றும் திருவனந்தபுரம் வட...