திருப்பூரில் அரச பள்ளி மாணவர்களுக்கு உயிர் காக்கும் நீச்சல் பயிற்சி - மாணவர்களை உற்சாகப்படுத்திய மாவட்ட ஆட்சியர்

திருப்பூர், அரசு பள்ளி மாணவர்களுக்காக நடந்த இலவச நீச்சல் பயிற்சி முகாமில் மாவட்ட ஆட்சியர் மாணவர்களுடன் நீச்சல் குளத்தில் இறங்கியது மாணவர்களிடையே மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.


திருப்பூர்: திருப்பூரில் அரசு பள்ளி மாணவர்களுக்காக நடந்த உயிர்காக்கும் நீச்சல் இலவச பயிற்சி முகாமில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் பங்கேற்றார்.

திருப்பூர் திருமுருகன் பூண்டி ரோட்டரி சங்கம் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உயிர் காக்கும் நீச்சல் இலவச பயிற்சி துவக்க விழா நடந்தது.

இதில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு திருமுருகன்பூண்டி ரோட்டரி சங்கத்தினர் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக நீச்சல் பயிற்சி அளிக்க புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர். இதன் மூலம் மாதம் தோறும் 20 அரசு பள்ளி மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு காலை மாலை என இரண்டு வேலைகளிலும் இலவசமாக நீச்சல் பயிற்சிகளை அளிக்க உள்ளனர்.



வேலம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நீச்சல் குளத்தில் பயிற்சிகள் நடக்கிறது. ஒவ்வொரு மாணவருக்கும் நீச்சல் பயிற்சிக்காக ஆகும் செலவு அனைத்தையும் ரோட்டரி சங்கமே ஏற்றுக்கொள்வதோடு ஆண்டு முடிவில் நீச்சல் பயிற்சியில் தகுதி பெரும் மாணவர்களை மாநில அளவிலான நீச்சல் போட்டிகளில் பங்கேற்க செய்ய உள்ளனர்.



திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச நீச்சல் பயிற்சியை துவக்கி வைத்து நீச்சல் குளத்தில் மாணவர்களுடன் நீச்சல் அடித்து ஊக்கமும் தன்னம்பிக்கையும் ஏற்படுத்தினார்.

மேலும் நீச்சல் பயிற்சிகளை முடிக்கும் மாணவர்கள் ஆபத்து காலங்களில் நீரில் மூழ்கியவர்களை எப்படி மீட்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொள்ள வேண்டும் எனவும், தாங்கள் நீச்சல் பழகியதோடு நிறுத்திக் கொள்ளாமல் மற்ற மாணவர்களையும் நீச்சலில் பழக ஊக்குவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். அரசு பள்ளி மாணவர்களுக்காக நடந்த இலவச நீச்சல் பயிற்சி முகாமில் மாவட்ட ஆட்சியர் மாணவர்களுடன் நீச்சல் குளத்தில் இறங்கியது மாணவர்களிடையே மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...