தாராபுத்தில் கல்லறை திருநாளையொட்டி முன்னோர்களுக்கு கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அஞ்சலி

தாராபுரம் கத்தோலிக்க திருச்சபை கல்லறைத் தோட்டத்தில் இறந்து போனவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பங்குத்தந்தை கனகராஜ் தலைமையில் சிறப்பு கூட்டு பிராத்தனை நடைபெற்றது. இதில்,100-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கல்லறைக்கு வந்து அவர்களின் முன்னோர்களை வழிபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கல்லறை திருநாளையொட்டி கிறிஸ்தவர்கள் தங்களின் முன்னோர்களின் கல்லறைக்கு சென்று கல்லறைகளை சுத்தம் செய்து, மலர்களால் அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர்.



தாராபுரம் கத்தோலிக்க திருச்சபை கல்லறைத் தோட்டத்தில் இறந்து போனவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. பங்குத்தந்தை கனகராஜ் தலைமையில் சிறப்பு கூட்டு பிராத்தனை நடைபெற்றது. பின்னர் கிறிஸ்துவ மத குருமார்கள் கல்லறைகளுக்கு புனித நீர் தெளித்தனர்.



அங்கு கூடி இருந்த கிறிஸ்தவ பொதுமக்கள் இறந்துபோன தங்கள் முன்னோர்கள் மற்றும் உறவினர்களை நினைவு கூரும் வகையில் மாலை அணிவித்து மலர் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இதனால் தங்களின் முன்னோர்களின் ஆசிர்வாதம் எப்போது தங்களின் குடும்பத்திற்கு கிடைக்கும் என்றும் கிறிஸ்தவர்களின் மத நம்பிக்கை. இந்தக் கல்லறை திருநாளையொட்டி 100-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கல்லறைக்கு வந்து அவர்களின் முன்னோர்களை வழிபட்டனர்.

Newsletter

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...