தாராபுத்தில் கல்லறை திருநாளையொட்டி முன்னோர்களுக்கு கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அஞ்சலி

தாராபுரம் கத்தோலிக்க திருச்சபை கல்லறைத் தோட்டத்தில் இறந்து போனவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பங்குத்தந்தை கனகராஜ் தலைமையில் சிறப்பு கூட்டு பிராத்தனை நடைபெற்றது. இதில்,100-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கல்லறைக்கு வந்து அவர்களின் முன்னோர்களை வழிபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கல்லறை திருநாளையொட்டி கிறிஸ்தவர்கள் தங்களின் முன்னோர்களின் கல்லறைக்கு சென்று கல்லறைகளை சுத்தம் செய்து, மலர்களால் அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர்.



தாராபுரம் கத்தோலிக்க திருச்சபை கல்லறைத் தோட்டத்தில் இறந்து போனவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. பங்குத்தந்தை கனகராஜ் தலைமையில் சிறப்பு கூட்டு பிராத்தனை நடைபெற்றது. பின்னர் கிறிஸ்துவ மத குருமார்கள் கல்லறைகளுக்கு புனித நீர் தெளித்தனர்.



அங்கு கூடி இருந்த கிறிஸ்தவ பொதுமக்கள் இறந்துபோன தங்கள் முன்னோர்கள் மற்றும் உறவினர்களை நினைவு கூரும் வகையில் மாலை அணிவித்து மலர் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இதனால் தங்களின் முன்னோர்களின் ஆசிர்வாதம் எப்போது தங்களின் குடும்பத்திற்கு கிடைக்கும் என்றும் கிறிஸ்தவர்களின் மத நம்பிக்கை. இந்தக் கல்லறை திருநாளையொட்டி 100-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கல்லறைக்கு வந்து அவர்களின் முன்னோர்களை வழிபட்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...