கோவையில் சூடான் மாணவர்களுக்கிடையே மோதல் - கத்திக்குத்து குறித்து போலீஸ் விசாரணை

மோதலுக்கு பயன்படுத்திய கத்தியை பறிமுதல் செய்த போலீசார் சூலூர் காவல் நிலையத்தில் இரு தரப்பை சேர்ந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் சூலூரில் ஒரே அறையில் தங்கி தனியார் கல்லூரியில் படித்து வந்த சூடான் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில்கத்தியால் குத்தியத்தில் மாணவர் ஒருவர் படுகாயமடைந்தார்.

சூலூரில் ஒரே அறையில் தங்கி தனியார் கல்லூரியில் படித்து வந்த சூடான் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் கத்தியால் குத்தியத்தில் மாணவர் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்அனுமதி சக மாணவனை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் சூலூரில் புதிய பேருந்து நிறுத்தம் அருகே செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் சூடான் நாட்டை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் சூடான் நாட்டைச் சேர்ந்த சுராக மற்றும் காலித் அவரது நண்பர்கள் மூன்று பேருடன் தனியாக அறை எடுத்து தங்கி கல்லூரியில் படித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அறையில் தங்கி இருந்த காலிட் மற்றும் சுரேகா ஆகிய இருவருக்கும் அடிக்கடி மோதல் போக்கு இருந்து வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் வழக்கம்போல் கல்லூரி முடித்து வந்து வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்போது மீண்டும் இருவருக்கிடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது இந்த மோதலில் காலித் அறையில் இருந்த காய் நறுக்கும் கத்தியை எடுத்து சுரேகாவை சரமாரியாக குத்தியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்து உள்ளார் சுரேகா, பின்னர் அறையில் தங்கி இருந்த சக நண்பர்கள் இதுகுறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சுரேகாவை மீட்டு பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் மோதலுக்கு பயன்படுத்திய கத்தியை பறிமுதல் செய்த போலீசார் காலத்தையும் கைது செய்து சூலூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...