கோவையில் சூடான் மாணவர்களுக்கிடையே மோதல் - கத்திக்குத்து குறித்து போலீஸ் விசாரணை

மோதலுக்கு பயன்படுத்திய கத்தியை பறிமுதல் செய்த போலீசார் சூலூர் காவல் நிலையத்தில் இரு தரப்பை சேர்ந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் சூலூரில் ஒரே அறையில் தங்கி தனியார் கல்லூரியில் படித்து வந்த சூடான் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில்கத்தியால் குத்தியத்தில் மாணவர் ஒருவர் படுகாயமடைந்தார்.

சூலூரில் ஒரே அறையில் தங்கி தனியார் கல்லூரியில் படித்து வந்த சூடான் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் கத்தியால் குத்தியத்தில் மாணவர் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்அனுமதி சக மாணவனை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் சூலூரில் புதிய பேருந்து நிறுத்தம் அருகே செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் சூடான் நாட்டை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் சூடான் நாட்டைச் சேர்ந்த சுராக மற்றும் காலித் அவரது நண்பர்கள் மூன்று பேருடன் தனியாக அறை எடுத்து தங்கி கல்லூரியில் படித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அறையில் தங்கி இருந்த காலிட் மற்றும் சுரேகா ஆகிய இருவருக்கும் அடிக்கடி மோதல் போக்கு இருந்து வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் வழக்கம்போல் கல்லூரி முடித்து வந்து வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்போது மீண்டும் இருவருக்கிடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது இந்த மோதலில் காலித் அறையில் இருந்த காய் நறுக்கும் கத்தியை எடுத்து சுரேகாவை சரமாரியாக குத்தியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்து உள்ளார் சுரேகா, பின்னர் அறையில் தங்கி இருந்த சக நண்பர்கள் இதுகுறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சுரேகாவை மீட்டு பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் மோதலுக்கு பயன்படுத்திய கத்தியை பறிமுதல் செய்த போலீசார் காலத்தையும் கைது செய்து சூலூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடக்கம்

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடங்கப்பட்டது. விழாவில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரிய...

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...