உடுமலையில் அரசு பெண்கள் பள்ளியில் தமிழ் கூடல் விழா

தமிழ் கூடல் விழாவையொட்டி பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல் நிலை பள்ளியில் நடைபெற்ற பேச்சு போட்டி கவிதை மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல் நிலை பள்ளியில் தமிழ் கூடல் விழா சிறப்பாக நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று தமிழ் கூடல் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் ப. விஜயா தலைமை ஏற்று உரை நிகழ்த்தினார். பள்ளி தமிழ் மன்றச் செயலர் தமிழாசிரியர் வே சின்னராசு வரவேற்புரை நல்கினார்.



முதுகலை உதவித் தலைமை ஆசிரியர் த ஏ ஜெயராஜ், பட்டதாரி உதவித் தலைமை ஆசிரியர் மஞ்சுளா ஆகியோர் முன்னிலை வகித்தனர் தமிழ் வளர்த்த சான்றோர்கள் என்னும் தலைப்பில் கலை இளமணி திருநெறிய தமிழரசி செல்வி உமா நந்தினிபால கிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். தமிழ்க்கூடல் நிகழ்ச்சியை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி கட்டுரைப் போட்டி கவிதைப் போட்டி ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் பாராட்டுச் சான்றுகளும் வழங்கப்பட்டன. முதுகலைத் தமிழ் ஆசிரியர் தி ஆர் கார்த்திகா நன்றியுரை ஆற்றினார்.



நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவியர்கள் கலந்து கொண்டனர். தமிழ் ஆசிரியர்கள் தைலியண்ணன் ஆர் ராஜேந்திரன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

Newsletter

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...

நிலம் வாங்குவது போல நடித்து ரியல் எஸ்டேட் நபரிடம் 6 பவுன் தங்க செயின் பறிப்பு; மூவர் கைது

கோவை மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சிவக்குமாரிடம் வீடு காட்டுவதாக கூறி பொன்னூத்து அம்மன் கோவில் பகுதிக்...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா, IAS பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, IAS, இன்று மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 30-வது...

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...