உடுமலையில் அரசு பெண்கள் பள்ளியில் தமிழ் கூடல் விழா

தமிழ் கூடல் விழாவையொட்டி பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல் நிலை பள்ளியில் நடைபெற்ற பேச்சு போட்டி கவிதை மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல் நிலை பள்ளியில் தமிழ் கூடல் விழா சிறப்பாக நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று தமிழ் கூடல் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் ப. விஜயா தலைமை ஏற்று உரை நிகழ்த்தினார். பள்ளி தமிழ் மன்றச் செயலர் தமிழாசிரியர் வே சின்னராசு வரவேற்புரை நல்கினார்.



முதுகலை உதவித் தலைமை ஆசிரியர் த ஏ ஜெயராஜ், பட்டதாரி உதவித் தலைமை ஆசிரியர் மஞ்சுளா ஆகியோர் முன்னிலை வகித்தனர் தமிழ் வளர்த்த சான்றோர்கள் என்னும் தலைப்பில் கலை இளமணி திருநெறிய தமிழரசி செல்வி உமா நந்தினிபால கிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். தமிழ்க்கூடல் நிகழ்ச்சியை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி கட்டுரைப் போட்டி கவிதைப் போட்டி ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் பாராட்டுச் சான்றுகளும் வழங்கப்பட்டன. முதுகலைத் தமிழ் ஆசிரியர் தி ஆர் கார்த்திகா நன்றியுரை ஆற்றினார்.



நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவியர்கள் கலந்து கொண்டனர். தமிழ் ஆசிரியர்கள் தைலியண்ணன் ஆர் ராஜேந்திரன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...