தாராபுரம் அறிவு திருக்கோவிலின் 29ம் ஆண்டு விழா- மாலை மாற்றிக் கொண்ட 106 தம்பதிகள்

தாராபுரம் அறிவு திருக்கோவிலின் 29-வது ஆண்டு விழா, அருட்தந்தை வேதாந்திரி மகரிஷியின் 113-வது ஜெயந்தி விழா, அன்னை லோகாம்பாள் 109-வது பிறந்தநாள் மற்றும் மனைவி நல வேட்பு விழா ஆகிய முப்பெரும் விழா தாராபுரம் அரிமா சங்க அரங்கத்தில் நடைபெற்றது.


திருப்பூர்: தாராபுரததில் நடந்த அறிவு திருக்கோவிலில் ஆண்டு விழாவில் 106 தம்பதிகள் மாலை மாற்றிக் கொண்டனர்.

தாராபுரம் அறிவு திருக்கோவிலின் 29-வது ஆண்டு விழா, அருட்தந்தை வேதாந்திரி மகரிஷியின் 113-வது ஜெயந்தி விழா, அன்னை லோகாம்பாள் 109-வது பிறந்தநாள் மற்றும் மனைவி நல வேட்பு விழா ஆகிய முப்பெரும் விழா தாராபுரம் அரிமா சங்க அரங்கத்தில் நடைபெற்றது.

விழாவில் தாராபுரம் அறிவுத்திருக்கோவில் அறக்கட்டளை தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி பேசினார். துணைத்தலைவர் மருத்துவர் தங்கராசு வரவேற்புரையாற்றினார். செயலாளர் ஆயிமுத்துரத்தினம் ரத்தினம், பொருளாளர் கோபால கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் அருட்செல்வி தம்பதியினர் உயிர்கலப்பு தவம் மற்றும் மலர் கனி பரிமாற்றம் செய்து வைத்தார்.

அதில் 106 தம்பதிகள் கலந்து கொண்டு மாலை மாற்றி, மலர் மற்றும் கனி பரிமாறிக்கொண்டனர். அதைத் தொடர்ந்து பேராசிரியர் நீலகண்டன் மனவளக்கலையின் மாண்பு குறித்து பேசினார். இதில் அரிமா சிவக்குமார் மற்றும் அரிமா சங்க அறக்கட்டளை நிர்வாகிகள், தாராபுரம் அறிவுத்திருக்கோவில் நிர்வாகிகள், தம்பதிகள் என 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். முடிவில் தாராபுரம் நகர அரிமா சங்க அறக்கட்டளை தலைவர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...