தாராபுரம் அரசு கலைக்கல்லூரி பைந்தமிழ் மன்றம் தொடக்க விழா - ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு

தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்துறையின் சார்பாக பகுத்தறிவு பைந்தமிழ் மன்ற தொடக்க விழா கல்லூரியின் தமிழ் துறையில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் பத்மாவதி தலைமையேற்று தமிழ் உரை வழங்கினார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தமிழ் மன்ற தொடக்க விழா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பாக நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தமிழ் மன்ற தொடக்க விழா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்துறையின் சார்பாக பகுத்தறிவு பைந்தமிழ் மன்ற தொடக்க விழா கல்லூரியின் தமிழ் துறையில் நடைபெற்றது.

விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் பத்மாவதி தலைமையேற்று தமிழ் உரை வழங்கினார். விழாவில் என் ஜி பி கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் தங்க மணிகண்டன் பாரதியின் கவித்துவம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

சிறப்பு முறையில் பாரதியின் கவி பாடல் வரிகள் காலத்தால் அழியாத ஓவியம் என்றும் இன்றைய திரைப்படப் பாடல்களின் கருத்துக்கள் பாரதியிடம் குவிந்து கிடக்கின்றன என்றும் பாரதி சமுதாயத்திற்கு கருத்துக்களை உதாரணத்துடன் தெளிவுபடுத்தினர். தமிழ்துறை தலைவர் முனைவர் சீதாராமன் வரவேற்புரை ஆற்றினர். தமிழ்த்துறை விரிவுரையாளர் முனைவர் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக அறிமுகம் அறிமுக உரை வழங்கினார் கௌரவ விரிவுரையாளர் விழாவில் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி துறை சார்பாக கடந்த வாரம் நடைபெற்ற பேச்சு மற்றும் கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசாக ஐந்தாயிரம் ரூபாயும் இரண்டாம் பரிசாக 3000 ரூபாயும் மூன்றாவது பரிசாக 2000 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் பேராசிரியர்கள், தமிழ் துறை மாணவிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...