ஆனைமலை அருகே அனுமதி சீட்டு இல்லாமல் கேரளாவுக்கு கனிம வளம் கடத்தல் - 3 லாரிகள் பறிமுதல்

மீனாட்சிபுரம் பகுதியில் கோவை புவியியல் மற்றும் சுரங்கத்துறை தனி வருவாய் அலுவலர் விஜயகுமார் தலைமையிலான தனிப்படையினர், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கேரளா மாநிலத்துக்கு கற்களை ஏற்றிச் சென்ற, கேரள பதிவு எண் கொண்ட, மூன்று டிப்பர் லாரிகளை மறித்து ஆவணங்களை சோதனை செய்தனர்.


கோவை: மீனாட்சிபுரம் பகுதியில் ஆய்வின்போது, பிடிப்பட்ட மூன்று டிப்பர் லாரிகளை, கோவை புவியியல் மற்றும் சுரங்கத்துறை தனி வருவாய் அலுவலர் விஜயகுமார் தலைமையிலான தனிப்படையினர், பறிமுதல் செய்து,ஆனைமலை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

ஆனைமலை அருகே, மீனாட்சிபுரம் பகுதியில் கோவை புவியியல் மற்றும் சுரங்கத்துறை தனி வருவாய் அலுவலர் விஜயகுமார் தலைமையிலான தனிப்படையினர், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கேரளா மாநிலத்துக்கு கற்களை ஏற்றிச் சென்ற, கேரள பதிவு எண் கொண்ட, மூன்று டிப்பர் லாரிகளை மறித்து ஆவணங்களை சோதனை செய்தனர். அதில், முறையான அனுமதி சீட்டு இல்லாமல், ஏழு யூனிட் அளவுள்ள கற்களை ஏற்றி வந்தது கண்டறியப்பட்டது.

வாகனங்களை பறிமுதல் செய்து, ஆனைமலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும், முறையாக அனுமதி சீட்டு இல்லாமல் கேரளாவுக்கு கனிம வளம் கொண்டு சென்ற மூன்று லாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனு அளித்தார்.

Newsletter

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...