ஆனைமலை அருகே அனுமதி சீட்டு இல்லாமல் கேரளாவுக்கு கனிம வளம் கடத்தல் - 3 லாரிகள் பறிமுதல்

மீனாட்சிபுரம் பகுதியில் கோவை புவியியல் மற்றும் சுரங்கத்துறை தனி வருவாய் அலுவலர் விஜயகுமார் தலைமையிலான தனிப்படையினர், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கேரளா மாநிலத்துக்கு கற்களை ஏற்றிச் சென்ற, கேரள பதிவு எண் கொண்ட, மூன்று டிப்பர் லாரிகளை மறித்து ஆவணங்களை சோதனை செய்தனர்.


கோவை: மீனாட்சிபுரம் பகுதியில் ஆய்வின்போது, பிடிப்பட்ட மூன்று டிப்பர் லாரிகளை, கோவை புவியியல் மற்றும் சுரங்கத்துறை தனி வருவாய் அலுவலர் விஜயகுமார் தலைமையிலான தனிப்படையினர், பறிமுதல் செய்து,ஆனைமலை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

ஆனைமலை அருகே, மீனாட்சிபுரம் பகுதியில் கோவை புவியியல் மற்றும் சுரங்கத்துறை தனி வருவாய் அலுவலர் விஜயகுமார் தலைமையிலான தனிப்படையினர், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கேரளா மாநிலத்துக்கு கற்களை ஏற்றிச் சென்ற, கேரள பதிவு எண் கொண்ட, மூன்று டிப்பர் லாரிகளை மறித்து ஆவணங்களை சோதனை செய்தனர். அதில், முறையான அனுமதி சீட்டு இல்லாமல், ஏழு யூனிட் அளவுள்ள கற்களை ஏற்றி வந்தது கண்டறியப்பட்டது.

வாகனங்களை பறிமுதல் செய்து, ஆனைமலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும், முறையாக அனுமதி சீட்டு இல்லாமல் கேரளாவுக்கு கனிம வளம் கொண்டு சென்ற மூன்று லாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனு அளித்தார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...