பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் போராட்டம்

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை அரசு கலைக்கல்லூரி முன்பு தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: எம்எல் பிஎச்டி பட்ட மேற்படிப்புகளுக்கு ஊக்க ஊதிய உயர்வு தொகை வழங்க வேண்டும், இணை பேராசிரியர் நிலையில் மூன்று வருடம் முடித்தவுடன் பேராசிரியர் பணி மேம்பாடு வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.



பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் இன்று மாநிலம் முழுவதும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் முன்பு வாயில் முழக்கப் போராட்டம் நடைபெறுகிறது.



இந்தப் போராட்டத்தில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், எம்எல் பிஎச்டி பட்ட மேற்படிப்புகளுக்கு ஊக்க ஊதிய உயர்வு தொகை வழங்க வேண்டும், இணை பேராசிரியர் நிலையில் மூன்று வருடம் முடித்தவுடன் பேராசிரியர் பணி மேம்பாடு வேண்டும், புத்தக பயிற்சிக்கு யுஜிசி நெறிமுறைகளை படிக்கால நீட்டிப்பு வழங்கி கல்லூரி கல்வி இயக்குனர் செயல்முறை வழங்க வேண்டும், இணை பேராசிரியர் பதவிக்கு முனைவர் பட்டம் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும், இதர அரசு ஊழியர்களுக்கான பொதுவான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.



தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக கோவை அரசு கலைக்கல்லூரி முன்பு கோவை மாவட்டத்தை சேர்ந்த தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். இந்தப் போராட்டத்தில் TNGUTA, AUT, MUTA ஆகிய சங்கங்களும் இணைந்து இந்த கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Newsletter

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...