பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் போராட்டம்

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை அரசு கலைக்கல்லூரி முன்பு தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: எம்எல் பிஎச்டி பட்ட மேற்படிப்புகளுக்கு ஊக்க ஊதிய உயர்வு தொகை வழங்க வேண்டும், இணை பேராசிரியர் நிலையில் மூன்று வருடம் முடித்தவுடன் பேராசிரியர் பணி மேம்பாடு வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.



பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் இன்று மாநிலம் முழுவதும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் முன்பு வாயில் முழக்கப் போராட்டம் நடைபெறுகிறது.



இந்தப் போராட்டத்தில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், எம்எல் பிஎச்டி பட்ட மேற்படிப்புகளுக்கு ஊக்க ஊதிய உயர்வு தொகை வழங்க வேண்டும், இணை பேராசிரியர் நிலையில் மூன்று வருடம் முடித்தவுடன் பேராசிரியர் பணி மேம்பாடு வேண்டும், புத்தக பயிற்சிக்கு யுஜிசி நெறிமுறைகளை படிக்கால நீட்டிப்பு வழங்கி கல்லூரி கல்வி இயக்குனர் செயல்முறை வழங்க வேண்டும், இணை பேராசிரியர் பதவிக்கு முனைவர் பட்டம் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும், இதர அரசு ஊழியர்களுக்கான பொதுவான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.



தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக கோவை அரசு கலைக்கல்லூரி முன்பு கோவை மாவட்டத்தை சேர்ந்த தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். இந்தப் போராட்டத்தில் TNGUTA, AUT, MUTA ஆகிய சங்கங்களும் இணைந்து இந்த கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...