பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் போராட்டம்

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை அரசு கலைக்கல்லூரி முன்பு தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: எம்எல் பிஎச்டி பட்ட மேற்படிப்புகளுக்கு ஊக்க ஊதிய உயர்வு தொகை வழங்க வேண்டும், இணை பேராசிரியர் நிலையில் மூன்று வருடம் முடித்தவுடன் பேராசிரியர் பணி மேம்பாடு வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.



பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் இன்று மாநிலம் முழுவதும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் முன்பு வாயில் முழக்கப் போராட்டம் நடைபெறுகிறது.



இந்தப் போராட்டத்தில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், எம்எல் பிஎச்டி பட்ட மேற்படிப்புகளுக்கு ஊக்க ஊதிய உயர்வு தொகை வழங்க வேண்டும், இணை பேராசிரியர் நிலையில் மூன்று வருடம் முடித்தவுடன் பேராசிரியர் பணி மேம்பாடு வேண்டும், புத்தக பயிற்சிக்கு யுஜிசி நெறிமுறைகளை படிக்கால நீட்டிப்பு வழங்கி கல்லூரி கல்வி இயக்குனர் செயல்முறை வழங்க வேண்டும், இணை பேராசிரியர் பதவிக்கு முனைவர் பட்டம் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும், இதர அரசு ஊழியர்களுக்கான பொதுவான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.



தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக கோவை அரசு கலைக்கல்லூரி முன்பு கோவை மாவட்டத்தை சேர்ந்த தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். இந்தப் போராட்டத்தில் TNGUTA, AUT, MUTA ஆகிய சங்கங்களும் இணைந்து இந்த கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...