உடுமலையில் முறைகேடாக மது விற்பனை 4 பேர் கைது - காவல்துறை அதிரடி நடவடிக்கை

திருப்பூர் மாவாட்டம் உடுமலையில் முறைகேடாக மது விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த 281 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


திருப்பூர்: முறைகேடாக மது விற்பனை செய்தவர்களை தனிப்படை அமைத்து திருப்பூர் காவல்துறை கைது செய்தது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சில்லறை மது விற்பனை நடைபெற்று வருவதாக மாவட்ட போலீஸ் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சூப்பிரண்டு சிறப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தவசியப்பன் தலைமையிலான தனிப்படை போலீசார் உடுமலை உட்கோட்ட காவல் சரக பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது உடுமலையைச் சேர்ந்த முஸ்தபா(54), மடத்துக்குளம் தாலுக்கா கணியூரை சேர்ந்த முகமது ஷேக்(32), புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சுதாகர்(35), மதுரை மாவட்டத்தை சேர்ந்த பார்த்தசாரதி(38) ஆகியோர் சில்லறை மதுவிற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்து உடுமலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 281 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...