கோவை யு.டி.எஸ் நிதி நிறுவனம் மோசடி - ஏமார்ந்த 200க்கும் மேற்பட்டோர் புகார் மனு அளிப்பு

யுனிவர்சல் டிரேடிங் சொலிசன் என்ற நிதி நிறுவனத்தில் பணம் தெலுத்தி ஏமாந்தவர்கள் 200க்கும் மேற்பட்டோர் கோவையில் உள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலக வளாகத்தில் மனு அளிக்க குவிந்தனர்.


கோவை: நாங்கள் உழைத்து சம்பாரித்து சிறுக, சிறுக சேமித்த பணத்தை இழந்து தவித்து வருகிறோம் என்று கோவை யு.டி.எஸ் நிதி நிறுவனத்தில் பணத்தை கட்டி ஏமாந்தவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

யுனிவர்சல் டிரேடிங் சொலிசன் என்ற நிதி நிறுவனம் தமிழகம் முழுவதும் அதிக லாபம் மற்றும் வட்டி தருவதாக போலியான வாக்குறுதிகளை அளித்து தமிழ்நாடு முழுவதும் சுமார் 75 ஆயிரம் பேரிடம் சுமார் 1300 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது. இதுதொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து விசாரனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் தகுந்த ஆதாரத்துடன் புகாரளிக்க காவல்துறை தரப்பில் அறிவுறுத்தியிருந்தனர்.



இதனால் கோவையில் உள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலக வளாகத்தில் 200 க்கும் மேற்பட்டவர்கள் மனு அளிக்க குவிந்தனர்.



இது குறித்து பணம் இழந்தவர்கள் கூறுகையில், காவல்துறையுனரின் வழிகாட்டுதலில் ஏற்கனவே புகாரளித்த நிலையில் மீண்டும் புகாரளிக்க வந்ததாகவும் இந்த நிதி நிறுவன மோசடி தொடர்பாக ஏற்கனவே ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தி நிவாரணம் வழங்குவதாக தெரிவித்தனர், ஆனால் எந்த நிவாரணமும் வழங்கவில்லை எனவும் அந்த குழுவையும் கலைத்து விட்டார்கள் எனவும் தெரிவித்தனர். நாங்கள் உழைத்து சம்பாரித்து சிறுக,சிறுக சேமித்த பணத்தை இழந்து தவித்து வருகிறோம். நிதி நிறுவனத்தின் பேரில் பல்வேறு இடங்க்களில் ஏக்கர் கணக்கில் இடம் வாங்கி போட்டுள்ளார்கள். அவற்றை பறிமுதல் செய்தாலே பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை செலுத்த முடியும் என தெரிவித்தனர்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...