திருப்பூரில் அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டம்

திருப்பூரில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: குடிநீர், சாக்கடை வசதி, மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறு மாநகராட்சி மேயர் தினேஷ்குமாரை நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கை குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர்.



திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 57 வது வார்டு சின்னபழனிசாமி நகர் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் 25 ஆண்டு காலமாக எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தராமல் காலம் தாழ்த்தி வருவதாகவும், தரமான தார் சாலை, சாக்கடை கால்வாய் , மழை நீர் வடிகால் உள்ளிட்ட வசதிகள் இல்லாததன் காரணமாக மிகப்பெரும் சிரமத்திற்கு உள்ளாவதாகவும், இது குறித்து பலமுறை மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டி அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால் மாநகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மாநகராட்சி மேயர் தினேஷ்குமாரை நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கை குறித்து மனு அளித்தனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...