குருடம்பாளையம் ஊராட்சியில் வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை - எம்.எல்.ஏ அருண்குமார் தொடங்கிவைப்பு

கோவை குருடம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ஸ்ரீதேவி நகர் பகுதியில் ரூபாய் 2 கோடியே 87 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமையில் நடைபெற்றது.


கோவை: குருடம்பாளையம் ஊராட்சியில் ரூபாய் 2 கோடியே 87 லட்சம் மதிப்பில் குடிநீர் வசதி, சாலை பணிகள், சாக்கடை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக பூமி பூஜை நடைபெற்றது.

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட குருடம்பாளையம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூபாய் 20 லட்சத்து 47 ஆயிரம், LPA நிதியில் ரூபாய் ஒரு கோடியே 47 லட்சத்து 98 ஆயிரம், 15வது நிதிக்குழு மானியம் ஊராட்சி சார்பில் ரூபாய் 40 லட்சத்து 66 ஆயிரம் மற்றும் ஊராட்சி பொது நிதியில் இருந்து 78 லட்சத்து 8 ஆயிரம் என மொத்தம் ரூபாய் 2 கோடியே 87 லட்சம் மதிப்பில் குடிநீர் வசதி, சாலை பணிகள், சாக்கடை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக பூமி பூஜை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு குருடம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் டி.ரவி தலைமை வகித்தார். பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய சேர்மன் நர்மதா துரைசாமி முன்னிலை வகித்தார்.



கதிர்நாயக்கன்பாளையம் ஶ்ரீதேவி நகரில் நடைபெற்ற பூமி பூஜைக்கு சிறப்பு விருந்தினராக அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் கலந்துக்கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.



தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களிடம் குறைகளை கேட்டரிந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இந்த விழாவில் அதிமுக பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.வி.என்.ஜெயராமன், ஒன்றிய துணைத்தலைவர் பூக்கடை ரவி, ஒன்றிய கவுன்சிலர் மாணிக்கம், திமுக வார்டு உறுப்பினர்கள் வளர்மதி, ராஜாமணி, ஒப்பந்ததாரர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...