குருடம்பாளையம் ஊராட்சியில் வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை - எம்.எல்.ஏ அருண்குமார் தொடங்கிவைப்பு

கோவை குருடம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ஸ்ரீதேவி நகர் பகுதியில் ரூபாய் 2 கோடியே 87 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமையில் நடைபெற்றது.


கோவை: குருடம்பாளையம் ஊராட்சியில் ரூபாய் 2 கோடியே 87 லட்சம் மதிப்பில் குடிநீர் வசதி, சாலை பணிகள், சாக்கடை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக பூமி பூஜை நடைபெற்றது.

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட குருடம்பாளையம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூபாய் 20 லட்சத்து 47 ஆயிரம், LPA நிதியில் ரூபாய் ஒரு கோடியே 47 லட்சத்து 98 ஆயிரம், 15வது நிதிக்குழு மானியம் ஊராட்சி சார்பில் ரூபாய் 40 லட்சத்து 66 ஆயிரம் மற்றும் ஊராட்சி பொது நிதியில் இருந்து 78 லட்சத்து 8 ஆயிரம் என மொத்தம் ரூபாய் 2 கோடியே 87 லட்சம் மதிப்பில் குடிநீர் வசதி, சாலை பணிகள், சாக்கடை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக பூமி பூஜை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு குருடம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் டி.ரவி தலைமை வகித்தார். பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய சேர்மன் நர்மதா துரைசாமி முன்னிலை வகித்தார்.



கதிர்நாயக்கன்பாளையம் ஶ்ரீதேவி நகரில் நடைபெற்ற பூமி பூஜைக்கு சிறப்பு விருந்தினராக அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் கலந்துக்கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.



தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களிடம் குறைகளை கேட்டரிந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இந்த விழாவில் அதிமுக பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.வி.என்.ஜெயராமன், ஒன்றிய துணைத்தலைவர் பூக்கடை ரவி, ஒன்றிய கவுன்சிலர் மாணிக்கம், திமுக வார்டு உறுப்பினர்கள் வளர்மதி, ராஜாமணி, ஒப்பந்ததாரர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...