நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் கண்டறியப்பட்ட நடைபாதையை ஆய்வு செய்தார் கோவை மாவட்ட ஆட்சியர்

நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் கண்டறியப்பட்ட நடைபாதையை கோவை மாவட்ட ஆட்சியரும், மாநகராட்சி ஆணையாளரும் இணைந்து ஆய்வு செய்தனர்.


கோவை: நடை பாதை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெறும் என்றும் இந்த நடைபயிற்சியின் முடிவில் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் நல்வாழ்வு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நடப்போம் நலம் பெறுவோம்" என்ற நடைபயிற்சி திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் கண்டறியப்பட்ட 8 கிமீ தூரம் கொண்ட நடைபாதையை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி மற்றும் மாநகராட்சி ஆணையாளர் த.சிவகுரு பிரபாகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் வருகின்ற 04.11.2023 அன்று சென்னையிலிருந்து நடப்போம் நலம் பெறுவோம்- (Health Walk) என்ற நடைபயிற்சி திட்டத்தினை அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கி வைக்கவுள்ளார்.



அதன்படி கோவை மாவட்ட பொது மக்களின் நலன் மற்றும் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு *நடப்போம் நலம் பெறுவோம்" என்கிற இத்திட்டத்திற்கு ரேஸ்கோர்ஸ் ஈஸ்ட் கிளப் ரோட்டில் தொடங்கி - திருச்சி சாலை - GH சிக்னல் வாலாங்குளம் (முழு சுற்று) GHசிக்னல் - திருச்சி சாலை வெஸ்ட் கிளப் ரோடு - ரேஸ்கோர்ஸ் (முழு சுற்று) - ஈஸ்ட் கிளப் ரோட்டில் முடியும் வகையில் 8 கிமீ தூரம் கொண்ட நடைபாதையை கண்டறிந்து ஆரோக்கியமான நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த பாதையை மாவட்ட ஆட்சி தலைவரால் நியமிக்கப்பட்ட குழு கண்டறிந்துள்ளது. இது மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெறும். இந்த நடைபயிற்சியின் முடிவில் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் நல்வாழ்வு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.

மேலும் உள்ளூர் மக்களுடன் இணைந்து மாவட்ட அலுவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆகிய அனைவரும் இந்த நடைப்பயிற்சியில் பங்கேற்பார்கள்.



மேலும் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பாதையில் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் இயன்முறை மருத்துவர், ஒரு தன்னார்வலர், சுகாதாரப் பணியாளர் ஆகியோரை கொண்ட மருத்துவக் குழுவின் உதவி மையம் அமைக்கப்படவுள்ளது.



அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆண்கள் விடுதியின் முன்பக்கத்தில் நடைப்பயிற்சிக்கான நுழைவு வாயில் தொடங்கி, 1வது கி.மீக்கு வாலாங்குளம் மக்கள் நடைபாதை முன்பக்கத்திலும், 2வது கி.மீக்கு மேற்கில் உள்ள உணவகம் அருகிலும், 3-வது கி.மீக்கு மனு மருத்துவமனை அருகிலும், 4வது கிமீக்கு டிடிடீசி ஹோட்டல் அருகிலும், 5வது கி.மீக்கு மேற்கு கிளப் ரோடு. ஐடிசி ஹோட்டல் அருகிலும், 6வது கி.மீக்கு மாவட்ட வருவாய் அலுவலர் முகாம் அலுவலகம் முன்பகுதியிலும், 7வது கிமீக்கு டி ஸ்டேன்ஸ் கம்பெனி லிமிட் முன்பகுதியிலும், 8வது கி.மீக்கு Zone 4 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆண்கள் விடுதி முன்பகுதியிலும், என ஒவ்வொரு கிமீ தூரத்திற்கும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...