அண்ணாமலைக்கு பேனர் வைக்க மறுப்பு - போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் மீது வழக்கு

சூலூரில் என் மண் என் மக்கள் யாத்திரையின் போது அண்ணாமலைக்காக வைக்கப்பட்ட பேனருக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


கோவை: மாவட்ட பொதுச் செயலாளர் சத்தியமூர்த்தி, துணை தலைவர் பரமசிவம், மாவட்ட செயலாளர் சிதம்பரம் ஆகியோர் மீது பொது மக்களுக்கு இடையூறு செய்வது அனுமதி இன்றி போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த வாரம் என் மண் என் மக்கள் யாத்திரையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது அண்ணாமலை வருகைக்காக கருமத்தம்பட்டி பகுதிகளில் பேனர்கள் வைக்கப்பட்டன. இந்த பேனர்களை பொது இடங்களில் வைப்பதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.



இதன் காரணமாக நான்கு ரோட்டில் பாஜகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசாரிடம் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



மேலும் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய மாவட்ட பொதுச் செயலாளர் சத்தியமூர்த்தி, துணை தலைவர் பரமசிவம், மாவட்ட செயலாளர் சிதம்பரம் ஆகியோர் மீது பொது மக்களுக்கு இடையூறு செய்வது அனுமதி இன்றி போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பிரிவுகளின் கருமத்தம்பட்டி டிஎஸ்பி தையல்நாயகி உத்தரவின் பேரில் ஆய்வாளர் அன்னம் வழக்கு பதிவு செய்துள்ளார்.

மேலும் அவர்கள் மூவரையும் நேரில் விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள கண்டித்து பாஜகவினர் சமூக வலைதளங்கள் கண்டன பதிவை பதிவிட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...