உடுமலை அரசு மருத்துவமனை அலுவலக சுற்றுச்சுவர் இடிந்து விழும் அபாயம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட சரவணா வீதியில் அரசு மருத்துவமனை அலுவலகத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


திருப்பூர்: உடுமலை ஆஸ்பத்திரி அலுவலகத்தின் சுற்றுச்சுவரை இடித்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட சரவணா வீதியில் அரசு ஆஸ்பத்திரி அலுவலகம் இயங்கி வருகிறது. பழமை வாய்ந்த இந்த கட்டிடமும் அதன் சுற்றுச்சுவரும் முறையான பராமரிப்பு இல்லாமல் உள்ளது.

இதன் காரணமாக சுற்றுச்சுவரின் அஸ்திவாரம் வலுவிழந்து சுவர் சாய்ந்த நிலையில் உள்ளது.உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் அந்த சுவற்றை இடித்து ஆற்றக்கோரி கோரிக்கை விடுத்தும் இதுவரையிலும் நடவடிக்கை எடுக்கவில்லை. சிறு அலட்சியம் கூட பெரிதளவில் விபத்தை ஏற்படுத்தும் என்று அதிகாரிகள் உணரவில்லை.

இதனால் அங்கு நிறுத்தப்படுகின்ற ஆம்புலன்ஸ், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் அலுவலகத்துக்கு வருகை தரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. எனவே சரவணா வீதியில் செயல்பட்டு வரும் உடுமலை ஆஸ்பத்திரி அலுவலகத்தின் சுற்றுச்சுவரை இடித்து அகற்றுவதற்கு முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...