உடுமலை அரசு மருத்துவமனை அலுவலக சுற்றுச்சுவர் இடிந்து விழும் அபாயம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட சரவணா வீதியில் அரசு மருத்துவமனை அலுவலகத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


திருப்பூர்: உடுமலை ஆஸ்பத்திரி அலுவலகத்தின் சுற்றுச்சுவரை இடித்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட சரவணா வீதியில் அரசு ஆஸ்பத்திரி அலுவலகம் இயங்கி வருகிறது. பழமை வாய்ந்த இந்த கட்டிடமும் அதன் சுற்றுச்சுவரும் முறையான பராமரிப்பு இல்லாமல் உள்ளது.

இதன் காரணமாக சுற்றுச்சுவரின் அஸ்திவாரம் வலுவிழந்து சுவர் சாய்ந்த நிலையில் உள்ளது.உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் அந்த சுவற்றை இடித்து ஆற்றக்கோரி கோரிக்கை விடுத்தும் இதுவரையிலும் நடவடிக்கை எடுக்கவில்லை. சிறு அலட்சியம் கூட பெரிதளவில் விபத்தை ஏற்படுத்தும் என்று அதிகாரிகள் உணரவில்லை.

இதனால் அங்கு நிறுத்தப்படுகின்ற ஆம்புலன்ஸ், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் அலுவலகத்துக்கு வருகை தரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. எனவே சரவணா வீதியில் செயல்பட்டு வரும் உடுமலை ஆஸ்பத்திரி அலுவலகத்தின் சுற்றுச்சுவரை இடித்து அகற்றுவதற்கு முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...