தரமின்றி சாலை அமைத்த மூவருக்கு மெமோ

800 மீட்டர் நீளத்துக்கு, ரூ.1.10 கோடியில் புதிதாக ரோடு போடும் பணி மேற்கொள்ளப்பட்டது. தரமின்றி சாலை அமைத்தற்காக மாநகராட்சி அதிகாரிகள் மூவருக்கு ‘மெமோ' வழங்கப்பட்டது.


கோவை: கோவையில் தரமின்றி சாலை அமைத்தற்காக மாநகராட்சி அதிகாரிகள் மூவருக்கு ‘மெமோ' வழங்கப்பட்டது.

பழைய ரோட்டை தோண்டி எடுக்காமல், லேசாக 'மில்லிங்' செய்து விட்டு, தார் ரோடு போடப்பட்டது. இத்தகவல், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கவனத்துக்கு சென்றது.நேற்று முன்தினம் இரவு, 11:00 மணி அளவில், அப்பகுதிக்கு நேரில் சென்று அவர் ஆய்வு செய்தார்.

புதிதாக போடப்படும் ரோட்டின் நீளம், அகலம், தார் கலவை வெப்ப அளவு உள்ளிட்டவற்றை ஆய்வுக்கு உட்படுத்தினார். ஒரு மணி நேரம் அங்கேயே இருந்து, தரமாக ரோடு எப்படி போடுவது என்பது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு கற்றுக்கொடுத்தார்.

நேற்று காலை, 8:00 மணிக்கு அதே பகுதிக்கு கமிஷனர் மீண்டும் சென்று ஆய்வு செய்தார்.

ஜல்லிக்கற்கள் மீது ரோலர் இயக்கி, 'காம்பேக்ட்' செய்யாமல் இருந்தது. ஆங்காங்கேகற்கள் பெயர்ந்து கிடந் தன.அவர் சொல்லிக் கொடுத்தது போல், தார் ரோடு போடாததால், கோபமடைந்த கமிஷனர், ஒப்பந்த நிறுவனமான, 'விஷ்ணு இன்ப்ரா' நிறுவனத்துக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்டார்.

இப்பணியை கள ஆய்வு செய்து, தரத்தை உறுதி செய்யாத குற்றத்துக்காக, உதவி பொறியாளர் பர்மான் அலி, உதவி நிர்வாக பொறியாளர் பிரபாகரன், நிர்வாக பொறியாளர் கருப்பசாமி ஆகியோருக்கு 'மெமோ' கொடுக்க, கமிஷனர் உத்தரவிட்டார்.

Newsletter

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...