வால்பாறையில் பிடிப்பட்ட புலியை வனப்பகுதியில் விடுவது தொடர்பாக வனத்துறையினர் ஆலோசனை

வால்பாறையில் மானாம்பள்ளி வனச்சரகத்திற்குள் வளர்க்கப்பட்டு வரும் புளியை வனப்பகுதிக்குள் விடுவதற்கு வனத்துறையினரின் கலந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


கோவை: புலியின் நடவடிக்கைகள், வேட்டையாடும் திறன், புலியை வனப்பகுதியில் விடுவதற்கான இடம் தேர்வு, ரேடியோ காலர் பொருத்தும் பணியினை செயல்படுத்துதல் ஆகியவற்றை குறுத்தி ஆலோசனைக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் இரண்டு வருடங்களுக்கு முன்பு 27.9.2021 அன்று உடலில் காயங்களுடன் முடிஸ் எஸ்டேட் பகுதியில் பிடிக்கபட்ட புலிக்குட்டியை சிகிச்சை அளிக்கப்பட்டு மானாம்பள்ளி வன சரகத்திற்குள் மந்திரி மட்டம் என்ற பகுதியில் பத்தாயிரம் சதுர அடி பரப்பளவில் மூன்றடுக்கு பாதுகாப்பு அமைத்து புலியை வேட்டையாடுவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.



தற்போது புலியை வனப் பகுதிக்கு விடுவதற்கு வனத்துறை, புலியின் உடல் நலம் மற்றும் அவற்றின் தற்போதைய மனம் சார்ந்த நிலை குறித்து தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர். ஆனைமலை புலிகள் காப்பகம் கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் தலைமையில் துணை இயக்குனர் பார்கவதேச தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் பிரதிநிதி கணேஷ் ரகுநாதன் என் சி எப் முதன்மை தலைமை மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகம் வன கால்நடை மருத்துவர் விஜயராகவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



இக்குழுவில் புலியின் நடவடிக்கைகள் வேட்டையாடும் திறன், புலியை வனப்பகுதியில் விடுவதற்கான இடம் தேர்வு, ரேடியோ காலர் பொருத்தும் பணியினை செயல்படுத்துதல், புலியினை வனப்பகுதியில் விடப்பட்ட பின்னர் தொடர்ந்து தனி குழு அமைத்து புலியின் நடமாட்டத்தை கண்காணித்தல் போன்றவைகளை பற்றி ஆலோசனை செய்தனர்.

Newsletter

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் கோரி கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம், ஓய்வு வயது உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ...

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...