வால்பாறையில் பிடிப்பட்ட புலியை வனப்பகுதியில் விடுவது தொடர்பாக வனத்துறையினர் ஆலோசனை

வால்பாறையில் மானாம்பள்ளி வனச்சரகத்திற்குள் வளர்க்கப்பட்டு வரும் புளியை வனப்பகுதிக்குள் விடுவதற்கு வனத்துறையினரின் கலந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


கோவை: புலியின் நடவடிக்கைகள், வேட்டையாடும் திறன், புலியை வனப்பகுதியில் விடுவதற்கான இடம் தேர்வு, ரேடியோ காலர் பொருத்தும் பணியினை செயல்படுத்துதல் ஆகியவற்றை குறுத்தி ஆலோசனைக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் இரண்டு வருடங்களுக்கு முன்பு 27.9.2021 அன்று உடலில் காயங்களுடன் முடிஸ் எஸ்டேட் பகுதியில் பிடிக்கபட்ட புலிக்குட்டியை சிகிச்சை அளிக்கப்பட்டு மானாம்பள்ளி வன சரகத்திற்குள் மந்திரி மட்டம் என்ற பகுதியில் பத்தாயிரம் சதுர அடி பரப்பளவில் மூன்றடுக்கு பாதுகாப்பு அமைத்து புலியை வேட்டையாடுவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.



தற்போது புலியை வனப் பகுதிக்கு விடுவதற்கு வனத்துறை, புலியின் உடல் நலம் மற்றும் அவற்றின் தற்போதைய மனம் சார்ந்த நிலை குறித்து தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர். ஆனைமலை புலிகள் காப்பகம் கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் தலைமையில் துணை இயக்குனர் பார்கவதேச தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் பிரதிநிதி கணேஷ் ரகுநாதன் என் சி எப் முதன்மை தலைமை மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகம் வன கால்நடை மருத்துவர் விஜயராகவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



இக்குழுவில் புலியின் நடவடிக்கைகள் வேட்டையாடும் திறன், புலியை வனப்பகுதியில் விடுவதற்கான இடம் தேர்வு, ரேடியோ காலர் பொருத்தும் பணியினை செயல்படுத்துதல், புலியினை வனப்பகுதியில் விடப்பட்ட பின்னர் தொடர்ந்து தனி குழு அமைத்து புலியின் நடமாட்டத்தை கண்காணித்தல் போன்றவைகளை பற்றி ஆலோசனை செய்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...