வால்பாறையில் பிடிப்பட்ட புலியை வனப்பகுதியில் விடுவது தொடர்பாக வனத்துறையினர் ஆலோசனை

வால்பாறையில் மானாம்பள்ளி வனச்சரகத்திற்குள் வளர்க்கப்பட்டு வரும் புளியை வனப்பகுதிக்குள் விடுவதற்கு வனத்துறையினரின் கலந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


கோவை: புலியின் நடவடிக்கைகள், வேட்டையாடும் திறன், புலியை வனப்பகுதியில் விடுவதற்கான இடம் தேர்வு, ரேடியோ காலர் பொருத்தும் பணியினை செயல்படுத்துதல் ஆகியவற்றை குறுத்தி ஆலோசனைக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் இரண்டு வருடங்களுக்கு முன்பு 27.9.2021 அன்று உடலில் காயங்களுடன் முடிஸ் எஸ்டேட் பகுதியில் பிடிக்கபட்ட புலிக்குட்டியை சிகிச்சை அளிக்கப்பட்டு மானாம்பள்ளி வன சரகத்திற்குள் மந்திரி மட்டம் என்ற பகுதியில் பத்தாயிரம் சதுர அடி பரப்பளவில் மூன்றடுக்கு பாதுகாப்பு அமைத்து புலியை வேட்டையாடுவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.



தற்போது புலியை வனப் பகுதிக்கு விடுவதற்கு வனத்துறை, புலியின் உடல் நலம் மற்றும் அவற்றின் தற்போதைய மனம் சார்ந்த நிலை குறித்து தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர். ஆனைமலை புலிகள் காப்பகம் கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் தலைமையில் துணை இயக்குனர் பார்கவதேச தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் பிரதிநிதி கணேஷ் ரகுநாதன் என் சி எப் முதன்மை தலைமை மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகம் வன கால்நடை மருத்துவர் விஜயராகவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



இக்குழுவில் புலியின் நடவடிக்கைகள் வேட்டையாடும் திறன், புலியை வனப்பகுதியில் விடுவதற்கான இடம் தேர்வு, ரேடியோ காலர் பொருத்தும் பணியினை செயல்படுத்துதல், புலியினை வனப்பகுதியில் விடப்பட்ட பின்னர் தொடர்ந்து தனி குழு அமைத்து புலியின் நடமாட்டத்தை கண்காணித்தல் போன்றவைகளை பற்றி ஆலோசனை செய்தனர்.

Newsletter

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...