உடுமலையில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அதிமுக பூத் கமிட்டி, பாசறை மற்றும் மகளிரணி அமைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது.


திருப்பூர்: அதிமுக வேட்பாளர்களின் வெற்றிக்கு உழைக்க வேண்டும் என அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அதிமுக பூத் கமிட்டி, பாசறை மற்றும் மகளிரணி அமைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது.



நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும் உடுமலைசட்டமன்ற உறுப்பினருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். அமைப்பு செயலாளர் கே ஆர் அர்ஜூனன்முன்னிலை வகித்தார். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் அமோக வெற்றிக்கு அனைவரும் அயராது பாடுபட வேண்டும் மற்றும் வெற்றிக்கான வியூகங்கள் அமைப்பது குறித்து பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.



இதில்உடுமலை நகர கழகச் செயலாளர் ஹக்கீம், குடிமங்கலம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் அன்பர் ராஜன், குடிமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், குடிமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் பிரனேஷ் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் எஸ் எம் நாகராஜ், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...