உடுமலை அருகே தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழப்பு!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கோயிலுக்கு சென்ற ஓருவர் தேனீக்கள் கொட்டியதில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


திருப்பூர்: நாள் தோறும் கோவிலுக்கு செல்பவரை கொட்டிய தேனீக்கள்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மடத்துக்குளம் கடத்தூர் குருவன்வலசு பகுதியைச் சேர்ந்தவர் சோலைமுத்து(37).



இவர் கடத்தூரில் உள்ள பழமை வாய்ந்த அருள்மிகு அர்ச்சுனேஸ்வரர் கோவிலுக்கு காலை மாலை செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். வழக்கம் போல் நேற்று மாலை 5.30 மணியளவில், கோவிலுக்கு சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக கோவில் அருகில் உள்ள மரத்திலிருந்த தேனீக்கள் கூட்டம் கலைந்து, சோலைமுத்துவை கொட்டியுள்ளது. இதில் பதட்டதுடன் கோவிலுக்குள் ஓடிய லைமுத்துவை, அங்கிருந்தவர்கள் மீட்டு, மடத்துக்குளம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தனர்.



அரசு மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து சோலைமுத்துவின் உடல் பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து கணியூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

உடுமலை அருகே கோவிலுக்கு சென்ற வாலிபர் தேனீக்கள் கொட்டியதில் உயிரிழந்த சம்பவம் இப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...