உடுமலை அருகே தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழப்பு!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கோயிலுக்கு சென்ற ஓருவர் தேனீக்கள் கொட்டியதில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


திருப்பூர்: நாள் தோறும் கோவிலுக்கு செல்பவரை கொட்டிய தேனீக்கள்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மடத்துக்குளம் கடத்தூர் குருவன்வலசு பகுதியைச் சேர்ந்தவர் சோலைமுத்து(37).



இவர் கடத்தூரில் உள்ள பழமை வாய்ந்த அருள்மிகு அர்ச்சுனேஸ்வரர் கோவிலுக்கு காலை மாலை செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். வழக்கம் போல் நேற்று மாலை 5.30 மணியளவில், கோவிலுக்கு சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக கோவில் அருகில் உள்ள மரத்திலிருந்த தேனீக்கள் கூட்டம் கலைந்து, சோலைமுத்துவை கொட்டியுள்ளது. இதில் பதட்டதுடன் கோவிலுக்குள் ஓடிய லைமுத்துவை, அங்கிருந்தவர்கள் மீட்டு, மடத்துக்குளம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தனர்.



அரசு மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து சோலைமுத்துவின் உடல் பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து கணியூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

உடுமலை அருகே கோவிலுக்கு சென்ற வாலிபர் தேனீக்கள் கொட்டியதில் உயிரிழந்த சம்பவம் இப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...