உக்கடம் கார் குண்டு வெடித்த கோயிலில் வானதி சீனிவாசன் வழிபாடு

கோவை மாவட்டம் உக்கடம் அருகே கடந்த ஆண்டு இதே நாளில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு நடந்த கோவிலில் பாஜகவின் மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வழிபாடு செய்தார்.


கோவை: உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த ஆண்டு இதே நாளில் கார் குண்டுவெடிப்பு நடந்த தினத்தை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரர் கோவில் முன்பாக கடந்த ஆண்டு அக்டோபர் 23ம் தேதி கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் காரை ஓட்டி வந்த ஜமிஷா முபின் என்பவர் உயிரிழந்தார். முதலில் சிலிண்டர் வெடி விபத்து என்று கூறப்பட்ட நிலையில் பின்னர் அது கார் வெடிகுண்டு தாக்குதல் என போலீசாரால் உறுதி செய்யப்பட்டது. இது குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இந்நிலையில் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு முதலாம் ஆண்டு தினத்தை முன்னிட்டு உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இருபதுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



இந்நிலையில் கார் குண்டு வெடிப்பு நடந்து ஓராண்டு ஆன நிலையில், அக்கோவிலில் வானதி சீனிவாசன், கனகசபாபதி உள்ளிட்ட பாஜகவினர் வழிபாடு நடத்தினர்.

இன்றுஆயுத பூஜையும் கொண்டாடப்படுவதால் ஏராளமான பொதுமக்கள் கோவிலில் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...