உக்கடம் கார் குண்டு வெடித்த கோயிலில் வானதி சீனிவாசன் வழிபாடு

கோவை மாவட்டம் உக்கடம் அருகே கடந்த ஆண்டு இதே நாளில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு நடந்த கோவிலில் பாஜகவின் மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வழிபாடு செய்தார்.


கோவை: உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த ஆண்டு இதே நாளில் கார் குண்டுவெடிப்பு நடந்த தினத்தை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரர் கோவில் முன்பாக கடந்த ஆண்டு அக்டோபர் 23ம் தேதி கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் காரை ஓட்டி வந்த ஜமிஷா முபின் என்பவர் உயிரிழந்தார். முதலில் சிலிண்டர் வெடி விபத்து என்று கூறப்பட்ட நிலையில் பின்னர் அது கார் வெடிகுண்டு தாக்குதல் என போலீசாரால் உறுதி செய்யப்பட்டது. இது குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இந்நிலையில் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு முதலாம் ஆண்டு தினத்தை முன்னிட்டு உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இருபதுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



இந்நிலையில் கார் குண்டு வெடிப்பு நடந்து ஓராண்டு ஆன நிலையில், அக்கோவிலில் வானதி சீனிவாசன், கனகசபாபதி உள்ளிட்ட பாஜகவினர் வழிபாடு நடத்தினர்.

இன்றுஆயுத பூஜையும் கொண்டாடப்படுவதால் ஏராளமான பொதுமக்கள் கோவிலில் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...