உடுமலையில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை இருமடங்கு உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை பகுதியில் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு பூக்கடைகளில் பூக்கள் விலை இரு மடங்காக உயர்ந்து உள்ளது.


திருப்பூர்: உடுமலைபேட்டையில் செவ்வந்தி பூ ஒரு கிலோ 300 ரூபாயிலிருந்து 400க்கும், சம்மங்கி பூ 300 லிருந்து 500 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை பகுதியில் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு பூக்கடைகளில் பூக்கள் விலை இரு மடங்காக உயர்ந்து உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் மிகவும் குறைந்த விலையில் விற்பனை ஆன நிலையில் தற்போது ஆயுத பூஜையை முன்னிட்டு இரு மடங்கு விலை உயர்ந்து உள்ளது.



மதுரை, திண்டுக்கல், நிலக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து பூக்கள் வருவதாகவும் தற்சமம் உடுமலைபேட்டையில் செவ்வந்தி பூ ஒரு கிலோ 300 ரூபாயிலிருந்து 400க்கும், சம்மங்கி பூ 300 லிருந்து 500 வரையும், அரளி 700 ரூபாய்க்கும், மல்லிகை பூ ரூ.1000 லிருந்து ரூ.1500 வரையிலும், முல்லை பூ கிலோ ரூ 800 க்கும், கோழிக் கொண்டை பூ 150, ஜாதி மல்லிகை ஒரு கிலோ 600 ரூபாய், தாமரை பூ ஒன்று 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...

புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனத்தில் விநாயகருக்கு ராஜ அலங்காரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் ரா...

வரசித்தி விநாயகருக்கு வெள்ளி கவசம் - ரூ.10 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெ...

பர்மிட் தாமதம், கட்டண குழப்பம்: அமைச்சர் மீது ஆம்னி உரிமையாளர்கள் சாடல்

ஆம்னி பேருந்து அதிக கட்டண வசூல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் இன்றுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என உரிமையாளர் சங்கம்...

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...