கோவை நேரு உள்விளையாட்டு அரங்கை ஆய்வு செய்தார் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய செயலர்

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கின் தடகள ஓடுதளப்பாதையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத் ரெட்டி, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை நேரு உள்விளையாட்டரங்கில் தங்கி பயின்று வரும் தமிழ்நாடு விளையாட்டு மாணவர்களுடன் கலந்துரையாடிய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத் ரெட்டி, மாணவர்களுக்கு தேவையான வசதிகளை கேட்டறிந்தார்.





கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் 6.67 கோடி மதிப்பில் தடகள ஓடுதளப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை சில மாதங்களுக்கு முன்பு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளபட்டு வந்த நிலையில், தற்போது அந்த தடகள ஓடுதளப்பாதையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத் ரெட்டி, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து உள்விளையாட்டரங்கில் தங்கி பயின்று வரும் தமிழ்நாடு விளையாட்டு மாணவர்களுடன் பேசிய அவர் மாணவர்களுக்கு தேவையான வசதிகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார், கோவை தடகள சங்க பொருளாளர் ஜான் சிங்கராயர் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...