கோவை நேரு உள்விளையாட்டு அரங்கை ஆய்வு செய்தார் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய செயலர்

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கின் தடகள ஓடுதளப்பாதையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத் ரெட்டி, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை நேரு உள்விளையாட்டரங்கில் தங்கி பயின்று வரும் தமிழ்நாடு விளையாட்டு மாணவர்களுடன் கலந்துரையாடிய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத் ரெட்டி, மாணவர்களுக்கு தேவையான வசதிகளை கேட்டறிந்தார்.





கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் 6.67 கோடி மதிப்பில் தடகள ஓடுதளப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை சில மாதங்களுக்கு முன்பு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளபட்டு வந்த நிலையில், தற்போது அந்த தடகள ஓடுதளப்பாதையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத் ரெட்டி, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து உள்விளையாட்டரங்கில் தங்கி பயின்று வரும் தமிழ்நாடு விளையாட்டு மாணவர்களுடன் பேசிய அவர் மாணவர்களுக்கு தேவையான வசதிகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார், கோவை தடகள சங்க பொருளாளர் ஜான் சிங்கராயர் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...