கோவை நேரு உள்விளையாட்டு அரங்கை ஆய்வு செய்தார் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய செயலர்

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கின் தடகள ஓடுதளப்பாதையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத் ரெட்டி, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை நேரு உள்விளையாட்டரங்கில் தங்கி பயின்று வரும் தமிழ்நாடு விளையாட்டு மாணவர்களுடன் கலந்துரையாடிய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத் ரெட்டி, மாணவர்களுக்கு தேவையான வசதிகளை கேட்டறிந்தார்.





கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் 6.67 கோடி மதிப்பில் தடகள ஓடுதளப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை சில மாதங்களுக்கு முன்பு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளபட்டு வந்த நிலையில், தற்போது அந்த தடகள ஓடுதளப்பாதையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத் ரெட்டி, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து உள்விளையாட்டரங்கில் தங்கி பயின்று வரும் தமிழ்நாடு விளையாட்டு மாணவர்களுடன் பேசிய அவர் மாணவர்களுக்கு தேவையான வசதிகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார், கோவை தடகள சங்க பொருளாளர் ஜான் சிங்கராயர் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...