உடுமலை ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் நவராத்திரி விழா - அன்னலட்சுமி அலங்காரத்தில் காட்சி

உடுமலை ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் நடைபெற்ற நவராத்திரி விழாவின் ஐந்தாம் நாளில் அன்னலட்சுமி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


திருப்பூர்: ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் நவராத்திரி விழாவில், கடவுளின் திருவுருவங்கள், தசாவதாரம், கிருஷ்ண லீலை, முளைப்பாரி எடுத்தல், கோபியர் நடனம், விளக்கு பூஜை, திருமண உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் கொழு பொம்மைகள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.



திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி ரோடு பூமாலை சந்து பகுதியில் அருள்மிகு ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் நவராத்திரி விழா கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. தினமும் ஒரு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்த நிலையில் ஐந்தாம் நாளில் அன்னலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.



மேலும் கோவில் பகுதியில் கடவுளின் திருவுருவங்கள், தசாவதாரம், கிருஷ்ண லீலை, முளைப்பாரி எடுத்தல், கோபியர் நடனம், விளக்கு பூஜை திருமண உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் கொழு பொம்மைகள் கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்தது.



பெண்கள் அனைவரும் பத்தி பாடல்கள் பாடினர்.



நவராத்திரி விழாவிற்கான ஏற்பாடுகளை ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...