கோழிப்பண்ணையில் பணியாற்றிய ஆறு சிறுவர்கள் அதிரடியாக மீட்பு

தாராபுரம் அருகே கோழிப்பண்ணையில் சிறார்கள் பணியாற்றுவதுவதாக புகார் வந்ததை அடுத்து குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர் ஆய்வு மேற்கொண்டதில் 6-சிறார்களை மீட்கப்பட்டனர்.


திருப்பூர்: குழந்தை தொழிலாளர்களை மீட்டு பள்ளியில் சேர்த்த அதிகாரிகள்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குண்டடம் அருகே பெல்லம்பட்டியில் உள்ள கோழிப்பண்ணையில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த 6-குடும்பத்தினர் தங்கி பணியாற்றி வந்தனர். இவர்களின் குழந்தைகள் அதேபண்ணையில் பணியாற்றுவதாக 1098-எண்ணுக்கு புகார் வந்தது இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் உதவி மையம் அலுவலர்கள் மற்றும் குண்டடம் போலீசார் அங்கு கள ஆய்வு செய்தனர் அதில் 13-வயது முதல் 17-வயது வரை உள்ள 6-சிறார்கள் கடந்த 2 -மாத காலமாக பணியாற்றிவந்தது தெரியவந்ததை உறுதி செய்தனர்.

இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.280 சம்பளம் வழங்கப்பட்டது. இந்நிலையில் சிறார்களை மீட்ட காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகள் நலக்குழு முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது இவர்களது பெற்றோரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் தாய்மொழி பள்ளிகள் இல்லாததால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல், வேலைக்கு அனுப்பியதாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, சொந்த ஊர்களில் உள்ள பள்ளிகளில் சேர்க்கும்படி அதிகாரிகள் உத்தரவிட்டனர் இதையடுத்து குடும்பத்தினர் குழந்தைகளை அழைத்து சென்றனர்.

Newsletter

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...

துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி

Coimbatore மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்ற...

சின்ன தடாகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: நீர்நிலைகளை தூர்வார கோரிக்கை

கோவை சின்ன தடாகம் பேருந்து நிலையம் அருகே கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. பல...