உடுமலையில் நடைபெற்ற வட்டார அளவிலான கலைத்திருவிழா- ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு

உடுமலைப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உடுமலைப்பேட்டை வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்று வருகின்றன


திருப்பூர்: மூன்று பிரிவுகளாக நடத்தப்படும் கலைத்திருவிழாவில் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

உடுமலைப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உடுமலைப்பேட்டை வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் கடந்த 18 ந்தேதி முதல் நாளை வரை நடைபெற்று வருகிறது. நேற்று 11 -12 வகுப்புகளுக்கும் இன்று 9 -10 வகுப்புகளுக்கும் நாளை வெள்ளிக்கிழமை 6, 7, 8 வகுப்புகளுக்கும் கலைத் விழா போட்டிகள் நடக்கிறது.

மூன்று பிரிவுகளாக நடத்தப்படும் இந்த போட்டிகளில் போட்டிகளில் உடுமலைப்பேட்டை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த வாரம் பள்ளி அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றது.



பள்ளி அளவில் சுமார் 400 மாணவிகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு பிரிவிலும் பள்ளியளவில் முதலிடம் பெற்ற சுமார் 200 மாணவியர்கள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் வட்டார அளவிலான கலைத் திருவிழாவில் பங்கேற்கின்றனர்.



இன்று நடைபெறும் ஒன்பதாம் வகுப்பு பத்தாம் வகுப்பிற்கான போட்டிகளில் மொத்தமாக 74 மாணவியர்கள் பங்கேற்கின்றனர். பள்ளி தலைமை ஆசிரியர் விஜயா அவர்களின் ஆலோசனையின் பேரில் தமிழ் ஆசிரியர்கள் த வே சின்னராசு, ஆர் ராஜேந்திரன், பட்டதாரி ஆசிரியை வை.விஜயலட்சுமி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகின்றனர்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...